23/12/2018

பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்…


படுக்கைகள் பலவிதம்..

எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை மருத்துவ திறவுகோல் என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது..

கம்பளிப் படுக்கை – குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும்..

கோரைப் பாய் – உடல்சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும்..

பிரம்புபாய் – சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும்..

ஈச்சம் பாய் – வாதநோய் குணமாகும். உடல்சூடு, கபம் இவை அதிகரிக்கும்….

மூங்கில் பாய் – உடல்சூடும், பித்தமும் அதிகரிக்கும்..

தாழம் பாய் – வாந்தி, தலைசுற்றல், பித்தம் நீங்கும்..

பேரீச்சம் பாய் – வாதகுன்ம நோய், சோகை நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்..

இலவம் பஞ்சு படுக்கை – உடலில் ரத்தம், தாதுபலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்..

மலர்ப் படுக்கை – ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும்..

இரத்தினக் கம்பளம் – நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும்..

இது தவிர இப்படியும் பயன்படுகிறது பாய்...

பனை ஓலை பாய் - பல சரக்கு வெல்ல மண்டிகளில் சரக்குகள் கையாள பயன்படும்..

மூங்கில் நார் பாய் -  வீடு, அலுவலகங்களில் தடுப்பு சுவர், மற்றும் கோடை வெப்ப தடுப்பானாகவும் பயன்படும்..

நாணல் கோரை பாய் -  மக்கள் பயன்பாட்டிற்கு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.