17/12/2018

இன்று பதவி விலகும் ராஜபக்சே - இலங்கையில் அரசியல் குழப்பம் முடிவடையுமா?


இலங்கை பிரதமராக ரணில் விக்ரம சிங்கே இருந்து வந்த சூழலில் கடந்த அக்டோபர் மாதம் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார் அதிபர் சிறிசேனா. ஆனால் பிரதமர் பதவியிலிருந்து விலக மறுத்த ரணிலுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இப்படியான பல்வேறு நிகழ்வுகளுடன் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்த  வழக்கை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், ராஜபக்சே பிரதமராக தொடர தடைவிதித்தது. இதை எதிர்த்து ராஜபக்சே தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இலங்கை உச்சநீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதிக்க மறுத்தது.

இதனால் வேறுவழியின்றி இன்று பிரதமர் பதவியை ராஐபக்சே ராஜினாமா செய்யவுள்ளார். இதன் பிறகு இலங்கையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த அரசியல் குழப்பம் விலகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.