17/12/2018

நாளை மலரப்போகும் தமிழர் ஆட்சியில்...


ஒரு விசியத்தை நமக்கு பிடிக்காதவன் செஞ்சா அதை ஏசுரறுதும், பிடிச்சவன் தவறே செஞ்சாலும் அதை கண்மூடித்தனமா கொண்டாடுறதுமே ஊடகங்களால் மக்களுக்கு ஏற்பட்ட பெரிய பார்வைக்கோணம்

கடந்த காலத்தில் எவனை தலைவனா காட்டி, அவன் பேச்சுக்கு கைத்தட்ட வைத்து, நமக்கெதிரானதை அரங்கேற்றிட்டு அவனை கெட்டவனாக்குனானோ, அதே நுட்பத்தை இந்த தவைமுறையிடமும் பயன்படுத்துறான்..

தற்போதைய தலைமுறையில் தமிழன் என்ற பெருமையும் தூண்டிவிடப்பட்டு ஆள்வோனே வேறு பரிமாணத்தில் அரியணை ஏறுவான், அன்று உனக்கெதிரானதும் நன்மையாகவே புலப்படும்..

ஏன், இன்னைக்கு ஸ்டெர்லைட்டை எதிர்க்குறவன் கூட நாளை, ஊழியால் அழிந்து போன கொடுமணல் நகரில் பண்டைய காலத்தில் இரும்பு எடுத்ததை எண்ணி பெருமையால் பெருமைக்காக அந்த திட்டத்திற்கு ஒப்புக்கொள்வான்..

அன்றும் வணிகன்..
இன்றும் வணிகன்..

இவை நடத்தப்படும் ஏனெனில் இதுவே ஆள்வோனின் அடுத்த அற்புத ஆயுதம்..

காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறாது..

சூழ்நிலை மாறினும் சூழ்ச்சிகள் மாறப்போவதில்லை...

தமிழன்டா எந்நாளும் (பாடலை கேளுங்க)...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.