17/12/2018

இலிமினாட்டி யும் உலக அரசியல்...


முதலில் இலுமினாட்டி என்ற சொல்லுக்கான தமிழ் வார்த்தையை காண்போம்.

இலுமினன்ட் - ஒளிக்கும் பொருள்.

இதலிருந்து உருவானது தான் இலுமினாட்டி.

தங்களை தாங்களே ஒளி பொருந்தியவர்கள் என்று கூறுவோரே இலுமினாட்டிகள்.

ஆனால் இவர்களுக்கு சரியான தமிழ் பெயர் பெரு முதலாளிகள். அதென்ன பெரு முதலாளிகள்.

நம்ம சன், விஜய், ஜெயா, ஸ்டார், ஜி போன்ற தொலைக்காட்சி குழுமங்களுக்கும் டாடா, பிர்லா, ரிலையன்ஸ் போன்ற இந்திய முதலாளிகளுக்கும் சம்பளம் கொடுக்கும் முதலாளிகள் தான் இந்த பெரு முதலாளிகள்.

உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து நாடுகளிலும் இது போன்ற முதலாளிகளுக்கு சம்பளம் தருகின்றனர்.

இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்தவர்களே இவர்கள் தான்...

இதென்ன புதுகதையா இருக்கு என்று பலரும் நினைக்கலாம்.... பின்வருவதை படித்தால் புரியும்...

வணிகம் என்ற பெயரில் ஐரோப்பியர் இங்கு வந்த பின் இங்கிருந்த ஒற்றுமையின்மையை கவனித்து நம்மை ஆளவும் செய்தனர் ஆங்கிலேயர்..

அவ்வாறு அடிமைப்பட்ட இந்தியாவை மட்டுமல்ல உலகின் பல பகுதிகளையும் ஆளுமை செய்ய இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெய்ன் மற்றும் ஜெர்மன் போன்ற ஐரோப்பிய நாடுகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டது..

அந்த சண்டையின் போது பண உதவிகள் செய்ததும் இந்த பெரு முதலாளிகளே.

ஆனால் இரண்டாம் உலகப் போருக்குப்பின் ஐரோப்பிய நாடுகள் ஒற்றுமைக்கு வந்து சண்டையிடுவதை நிறுத்திக்கொண்டனர். (உண்மையில் அதை விட்டால் வேறு வழியில்லை).

அந்த இரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவின் கிழக்கிழிருந்து போரிட்டு வந்த சுபாஸ் சந்திர போஸ் தலைமையிலான போர்குழுவும் இங்கிலாந்து படை வீரர்களை தோல்வியன் விழிம்பிற்கே தள்ளியது.

மேலும் இந்திய மக்கள் பலரும் அகிம்சை வழியில் போராடி வந்தனர்.

இதனால் அந்நிய பொருட்களை இந்தியாவில் விற்பதற்கு பல சிக்கல்கள் உருவானது.

இதனால் இங்கிலாந்து (ஐரோப்பிய நாடுகள் அனைத்தும்) அரசு இனி உலக மக்களை மிரட்டி ஆண்டு வருவது இயலாத காரியம் அவர்களை அவர் போக்கிலேயே வாழ வி ட்டு பின் நாம் பலன் காண வேண்டும் என்ற நோக்கத்தில் சுதந்திரம் தருவதாக நல்லவன் வேசம் போட்டனர்.

இந்த வேசத்தை உண்மையென நம்பி நம் முன்னோர்களும் சந்தோசம் கொண்டனர்.

ஆனால் ஆங்கிலேயன் இந்தியா வருவதற்கு முன் இருந்த ஒற்றுமையின்மை சுதந்திர போராட்டத்தின் காரணமாக காணமல் சென்று அனைவரும் நாட்டு நன்மைக்காக ஒன்றினைந்து இருந்தனர்.

இந்த ஒற்றுமை ஒருநாள் ஆங்கிலேயனுக்கே ஆபத்தாக திரும்பி விடும் என்று பயந்த ஆங்கிலேயன் பிரிவினையை வளர்க்க நேரு மற்றும் ஜின்னா மூலமாக இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு தூண்டிவிட்டனர்.

இதனால் எண்ணற்ற உயிர் சேதமும் பொருள் இழப்பும் ஏற்பட்டது மட்டுமல்ல, இந்திய பாகிஸ்தான் மக்களுக்கு நிரந்தரமான இடையூறும் உருவானது.

என்னங்க இலுமினாட்டின்னு தலைப்ப போட்டுட்டு சுதந்திர போராட்ட வரலாறா இருக்கேனும் தோணுதா? விசயத்துக்கு வருவோம்....

இரண்டாம் உலகப்போருக்கு முன்னாடி ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் தயாரித்து விற்பனை செய்து வந்த நிறுவன முதலாளிகள் அடுத்து என்ன செய்வது என்று யோசிச்சு ஒரு முடிவை எடுத்தாங்க, அந்த முடிவெடுத்தவங்க தான் பெரு முதலாளிகள். அந்த திட்டம் தான் இன்று நம்மை இந்நிலையில் வைத்துள்ளது.

வெளிநாட்டு பொருட்களை இந்தியாவில் விற்க கூடாது என்று சுதந்திரத்திற்கு முன் போராடிய காங்கிரஸ் இயக்கம் ஆட்சி பொருப்பில் வந்தது.

காந்தியுடன் பல போராட்டங்களில் பங்கெடுத்த பல சுதந்திர போராளிகள் அரச பொருப்பில் அமர்ந்தனர்.

கிபி 1960ம் ஆண்டு பசுமை புரட்சி என்றொரு திட்டத்தை கொண்டு வந்தனர். அந்த திட்டத்திற்கு வறட்சியை காரணம் காட்டியுள்னர் அப்போதய அமைச்சர்கள்.

அப்போதைய மக்கள் தொகை 40 கோடி மற்றும் மழையின் அளவு இன்றுள்ளதை விட அதிகம், அன்றிருந்த விளைச்சல் நிலம் இன்று இருப்பதை விட பல மடங்கு அதிகம். மேலும் இன்றுள்ள விவசாயிகளை விட அன்றய விவசாயிகளும் அதிகம்.

அப்படி இருக்க இன்று 120 கோடி மக்களுக்கு உணவளித்தது போக வெளிநாட்டுக்கு ஏற்றுமதியும் செய்கின்றோம்.

ஆனால் அன்று 40 கோடி மக்களுக்கும் அப்போதைய அரசாங்கம் உணவாக வழங்கியது மைதாமாவையும் உளுத்து போன அரிசியையும் தான்.

இது எவ்வாறு நடந்தது என்று அன்று ஆண்டவர்களுக்கே வெளிச்சம் (ஆண்டவனல்ல, ஆண்டவர்).

சரி இந்த பசுமை புரட்சியின் விளைவாக என்ன செய்தனர் என்று பார்ப்போம்.

வெளிநாட்டு உரங்களையும் விதைகளையும் இந்தியாவில் விற்பதற்கு அனுமதித்தனர்.

உரங்கள் என்றால் வெடி குண்டு தயாரிக்க பயன்பட்ட அம்மோனியாவையும் சேர்த்து. மரபியல் மாற்றம் செய்யப்பட்ட விதைகள்.

இந்த விதைகள் திரும்பவும் வேண்டுமானால் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்தே வாங்க வேண்டும்.

இதனால் சுதந்திரத்திற்கு முன் வெளிநாட்டு பொருட்களை எதிர்த்த காங்கிரஸே வழிய வந்து வெளிநாட்டு பொருட்களுக்கு ஆதரவளிப்பது பலவிதமான விமர்சனங்களை உருவாக்கியது. இருப்பினும் பசுமை புரட்சி அமலாக்கம் செய்யப்பட்டது.

அடுத்து செய்த புரட்சி வெண்மை புரட்சி..

அரசாங்கம் வெளிநாட்டு உரங்களை விற்பதற்கு கூவிக் கொண்டே இருந்தாலும் நம் மக்கள் நாட்டு மாடுகளை வைத்துக்கொண்டு அதில் கிடைக்கும் கழிவுகளையே விலை நிலங்களுக்கு உரமாக பயன்படுத்தி வந்த காரணத்தினால் ராசாயன உரத்தை வாங்க வில்லை.

இதனால் நாட்டு மாடுகளின் பயன்பாட்டை குறைக்க உருவானது தான் இந்த வெண்மை புரட்சி ( தற்போது பீட்டா).

அதாவது நம்ம ஊர் மாடுகள் 1-2 லிட்டர் பால் தான் தரும் வெளிநாட்டு மாடுகள் 10-15 பால் தரும் என்று வெளிநாட்டு மாடுகளின் விந்தை இறக்குமதி செய்து நாட்டு மாடுகளையும் கலந்து விட்டனர்.

இதனால் நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைந்தது. மேலும் இயந்திர வருகையின் காரணமாக இந்திய காளையினங்களும் காணமல் போனது. வேறு வழியின்றி விச உரங்களை வாங்கி மண்ணில் போட்டனர் நம்ம ஊர் விவசாயிகள்.

இவ்வாறு நாம் உண்ணும் உணவுக்கான விதைகளையும் உரத்தையும் வெளிநாடுகளில் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம்.

இதனால் தான் இன்று உணவு பற்றாக்குறை இல்லாமல் இருப்தாக கருத்து தெரிவிக்கும் சிலர் அந்நிறுவனங்களின் கை கூலிகள் என்பதை மறந்து விடக்கூடாது.

இந்த உரங்களையும் விதைகளையும் விற்பனை செய்யும் நிறுவனங்களின் உரிமையாளர்களையே நாம் பெரு முதலாளிகள் என்று கூறுகிறோம்.

அதெல்லாம் சரிங்க தொலைக் காட்சிகளுக்கும் இந்திய பணக்காரர்களுக்கும் இவர்கள் சம்பளம் கொடுப்பதாக சொன்னது எதற்கு என நீங்க நினைப்பது புரியுது...

கிபி 1990 வரை விதைகள், உரங்கள் மற்றும் இயந்திர வாகனங்களை விற்று பெற்ற லாபம் பற்றாததால் அத்தியாவசிய பொருட்களின் மேல் கவனத்தை திருப்பினர் இந்த பண முதலைகள்.

அத்தியாவசிய பொருட்கள் என்றால் சோப்பு, பேஸ்ட், பவுடர் போன்ற பொருட்கள்.

இதற்கு முன்பே சந்தையில் இருந்த (சைசூர் சேன்டல், கோபால் பல்பொடி போன்றவை) இந்திய பொருட்களை ஓரம் கட்டிவிட்டு அவர்களுடைய பொருட்களை மக்கள் வாங்க வேண்டும் என்பதற்காக நல்ல விளம்பர தூதுவர்களை நியமிக்க தொடர்ந்து இந்திய பெண்களுக்கு உலக அழகி பட்டத்தையும் பிரபஞ்ச அழகி பட்டத்தையும் மாறி மாறி வழங்கினர் 1994 முதல் 2000 வரை.

ஆனால் 2000 திற்கு பிறகு இந்தியாவில் அழகிகளே இல்லையாம்.. (அவர்கள் கொடுக்கும் கிரீமை போட்டால் எங்கிருந்து அழகு வரும்).

அந்த உலக அழகிகளும் தான் அழகாக காரணம் இந்த சோப்பு அந்த கிரீம் என்று நடித்துக்காட்ட, நாமும் அவர்கள் காட்டியதை பார்த்து மயங்கி அந்த பொருட்களை வாங்கி பயன்படுத்தினோம் பயன்படுத்துறோம்.

இப்படி தான் அனைத்து அழகு சாதன பொருட்களும் இந்தியா வந்தது.

இதற்கும் மத்திய அரசு உலக மயமாக்கல் என்ற திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது தான் காரணம்.

இப்படித்தான் கிருக்கு விளையாட்டு வீரர்களால் சத்து பவுடர்கள் என்று குப்பைகளையும், கூல்டிரிங்குஸ் என்று அக்காமாலா கப்சிகளையும் விற்பனை செய்தனர் இதே பெரு முதலாளிகள்.

இதே காலகட்டத்தில் இந்தியாவில் உருவான தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுடன் ஒப்பந்தமும் போட்டுக் கொன்டனர். இதை விளம்பரப் படுத்தினால் இவ்வளவு பணம் தருவோம் என்று.

சற்று சிந்தித்து பாருங்கள் இந்தியா (உலகம்) முழுவதும் உள்ள தனியார் தொலைகாட்சி நிறுவனங்களுக்கு தேவையான பண உதவி எங்கிருந்து கிடைக்கிறது. விளம்பரதாரர்கள் மூலமாக தானே கிடைக்கிறது.

விளம்பரங்களில் வரும் தகவல் உண்மையா பொய்யா என்று கூட ஆராயாமல் அப்படியே திரையிடுவதை சட்டமும் தடுக்க வில்லை, தொலைகாட்சி நிறுவனங்களும் கவனிப்பதில்லை. பணம் கொடுத்தால் எதை வேண்டுமானாலும் திரையிடுவர் .

ஆக இந்த பண முதலைகள் என்ன சொல்கின்றனரோ அது மட்டுமே தனியார் ஊடகங்களில் வெளிவரும். (பொது ஊடகம் என்பது நம்மை ஏமாற்ற கூறும் கதை).

இப்போது சொல்லுங்கள் தொலைகாட்சி நிறுவனங்களுக்கு முதலாளி யார்?

நிச்சயமாக விளம்பரதாரர்களே...

சரி அடுத்து உள்ளூர் முதலாளிகளுக்கு எப்படி இவர்கள் முதலாளி ஆனார்கள் என்று பார்ப்போம்.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மன் போன்ற நாட்டு மக்கள் புத்திசாலிகள் அதனால் மாசு ஏற்படுத்தக்கூடிய தோல், துணி, சிமென்ட் மற்றும் இதுபோன்ற சில தொழிற்சாலைகளை எதிர்த்து போராடினர்.

ஆனால் அந்த சொகுசு வாழ்கையை கைவிட முடியவில்லை. அதே நேரம் அந்த பெரும் பண முதலைகளும் வியாபாரம் தடைபடக்கூடாது என்பற்காக ஏமாளி நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், பங்ளாதேஷ் போன்ற நாடுகளில் உள்ள எலும்பு பொருக்கி நாய்கள் சிலவற்றிடம் அந்த தொழிலை இங்கு தொடங்க அறிவுறுத்தினர். அதற்கு பொருளுதவியும் செய்தனர்.

அதாவது இங்குள்ள எலும்பு பொருக்கி நாய்கள் இங்குள்ள ஏமாளிகளை வைத்து தயாரித்து கொடுத்து விடுவர், அதை வாங்கி சென்று பல மடங்கு லாபம் வைத்து அவர்கள் நாட்டில் விற்று விடுவர் இந்த பண முதலைகள்.

அதில் உறுவாகும் கழிவுகளை நம்ம ஊர் அரசியல் வியாதிகள் ஆற்றிலும் கடலிலும் கலந்து விட ஏற்றவாறு உதவியும் செய்வர்.

இங்குள்ள ஏற்றுமதியாளர்கள் அனைவருக்கும் முதலாளி யார்?

வெளிநாட்டில் இருந்து பணம் கொடுத்து பொருள் வாங்கும் பண முதலைகளே...

இதில் நம்ம ஊர் முதலாளிகள் இலாபம் பார்ப்பது பிடிக்காமல் அவர்கள் நேரடியாக தொழிற்சாலைகளை நிர்வகிக்க ஏதுவாக உதவுவதே இப்போது கொண்டு வரப்படும் நில உரிமை சட்டம் மற்றும் அந்நிய முதலீடு போன்றவை.

இப்போது சொல்லுங்கள் நாம் சுதந்திர நாட்டில் சுதந்திரமாக உள்ளோமா?

பின் வரும் பொருட்கள் சந்தைக்கு வருமுன் மனித வாழ்க்கை எப்படி இருந்தது இப்போது எப்படி உள்ளது?

Soap - Lux, Hamam, Rexona, Lifebouy etc.

Tooth Paste and Brush- Colgate, Pepsodent, closeup etc.

Shampoo - Clinic plus, Allclear, H&S, Meera sikkai, Karthika Sikkai, Pantene Dove etc.

Powder - Ponds, Spice, Z, Dermi cool etc.

Washing Soap and Powder - Rin, Surf Exel, Tide, Ujala Etc.

Cool Drings - Pepsi, cock tropicona etc.

Energy Drings - Horlics, Boost, Bournvita etc.

கோதுமை மாவு
பாசுமதி அரிசி
ஓட்ஸ்
நூடுல்ஸ்
சேமியா
மசாலா பொருட்கள்
அனைத்து சமயல் எண்ணெய்கள்
கழிவரை கழுவும் மருந்து
பேனா
பென்சில்
கார்
பைக்
செல்போன்
தொலை தொடர்பை வழங்கும் சிம் கார்டு நிறுவனங்கள்
ஆயத்த ஆடைகள்
பெட்ரோல்
டீசல்
சிமென்ட்

இப்படி இன்னும் பல பொருட்கள் ஒரு ரூபாய் மிட்டாயிலிருந்து கோடி ரூபாய் இயந்திரங்கள் வரை இவர்களுடைய நிறுவனங்களால் தான் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது.

இவர்களது பொருட்களை வாங்கி பயன்படுத்துவதால் உருவாகும் நோய்களுக்காக நாம் உண்ணும் மருந்துகளும் மாத்திரைகளும் தயாரிக்கும் நிறுவனமும் இவர்களுடையது தான்.

என்ன தலை சுற்றுகிறதா?

முதன் முதலில் தெரிந்த போது எனக்கும் அப்படித்தான் இருந்தது.

தயாரிப்பு நிறுவனங்கள் குறிப்பாக இணைக்ப்பட்டுள்ள படத்திலுள்ள நிறுவனங்களாகத் தான் இருக்கும்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.