03/05/2017

ஆகாயத்தில் ஒரு ஒளி - 53...


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்கதரிசனத்தில் இன்று நாம் அறிந்து கொள்ளும் பகுதி 53-ம் தீர்க்க தரிசனப் பகுதியாகும். மக்களின் வாழ்வாதார சூழ்நிலைகள் இவ்வுலகில் பொருளாதாரத்தை சார்ந்தே உள்ளது. அந்த பொருளாதாரம் உடல் உழைப்பின்றி, வெறும் பதிவேடுகளை சார்ந்த ஒரு வேலையாக மட்டுமே இன்று நடைமுறையில் நிலவி வருகிறது. உடல் உழைப்பின்றி வாழும் அத்தனை மனிதகுலமும் இன்று மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்படும் ஒரு அவல நிலை உருவாகிட போவதாக 53-ம் தீர்க்க தரிசனம் இங்கு ஒரு குறிப்பை தருகின்றது.

53-ம் தீர்க்க தரிசனம் அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டு மக்கள் யாவரும் தன்னுடைய தாய்நாட்டை நோக்கி திரும்பும் ஒரு அவல நிலை உருவாகிட உள்ளதாகவும், அந்த மக்கள் வெறும் கம்யூட்டரை மட்டுமே நம்பி இதுநாள்வரை வாழ்ந்தவர்கள் என்றும், அவர்களால் தன் தாய் நாட்டிற்கு எந்த அளவிலும் உதவ முடியாத சூழ்நிலை உருவாகும் என்றும், படித்த அத்தனை மக்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கும் நிலை அந்த தாய்நாடுகளுக்கு இருக்காது என்றும் 53-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது. இதனால் உடல் உழைப்பால் மட்டுமே ஒருவன் முழுமையான தன்னிறைவை அடைய முடியும் என்று அந்த 53-ம் தீர்க்க தரிசனக் குறிப்பு இங்கு அறிவுறுத்துகின்றது.


தமிழ்நாட்டில் தற்போது உருவாகும் ஒரு அதிர்ச்சியான சூழல் பல கிராமங்களை பீதிக்குள் உள்ளாக்கும் என்றும், கொலை, கொள்ளை போன்றவை அதிகமாக நடைபெறும் என்றும், இதனால் பொதுமக்களே தங்களை காத்துக் கொள்ள புதிய யுத்திகளை ஆங்காங்கே கையாண்டு தங்களை காத்துக் கொள்ளும் நிலை உருவாகிட உள்ளதாக 53-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

திருநெல்வேலி மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டிய பகுதி என்றும், அங்கு பல சமூக விரோதச் செயல்கள் நடைபெறுவதற்கான முகாந்தரங்கள் உருவாகும் என்றும், அதனை தடுத்திட அரசு உரிய நடவடிக்கைகளை அங்கு மேற்கொள்ளும் என்று 53-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

பாதாள சாக்கடை திட்டத்தினால் பல விஷயங்கள் வெளிச்சத்திற்கு வரும் என்றும், இதனால் பல திடீர் குழப்பங்கள் மக்கள் மத்தியில் ஏற்படும் என்று 53-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


கல்வெட்டு ஒன்று கஞ்சமலை அடிவாரத்தில் கிடைக்கப்பெறும் என்றும், அதில் சித்தரின் ஒரு இரகசிய குறிப்பு இடம் பெற்றிருக்கும் என்றும், அதனை கண்டெடுத்த 7-ம்நாள் முதல், அம்மலையில் சித்தர்களின் நடமாட்டத்தை மக்கள் காண உள்ளார்கள் என்று 53-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

பல புதுமைகளை தமிழகம் விரைவில் சந்திக்க உள்ளதாகவும், ஆச்சர்யங்களும், பல வினோத சம்பவங்களும் தமிழகம் முழுவதும் நிறைந்து காணப்படும் என்றும், இது வரும் ஏப்ரல் மாதம் முதல் நிகழ உள்ளதாக 53-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


தங்கத்தின் விலை திடீரென்று வீழ்ச்சி அடையும் என்றும், இதனால் இந்தியா மட்டுமின்றி பல உலக நாடுகள் பொருளாதார பின்னடைவை திடீரென்று சந்திக்க உள்ளதாகவும், ஆனால் மக்களின் நிலை இதனால் சற்று உயர்ந்து காணப்படும் என்றும், உயர்ந்த நிலையில் உள்ள பலரின் நிலை இதனால் பல்வேறு வீழ்ச்சிகளை சந்திக்கும் நிலை உருவாகும் என்று 53-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


சமயம் போற்றும் அன்னை சமயபுரத்தாளின் அற்புதம் உலகம் எங்கும் வெளிப்பட உள்ளதாகவும், அந்த அன்னையின் வெளிப்பாடுகளும், மகிமைகளும் மக்கள் அறியும் அளவிற்கு நிஜமானதாகவும், தத்ரூபமாகவும் அமைய உள்ளதாக 53-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது. பல புதுமைகளை அன்னை வழியில் இவ்வுலகம் காண உள்ளதாக 53-ம் தீர்க்க தரிசனக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

மேல்மருவத்தூர் இனி கவனத்தில் கொள்ள வேண்டிய பகுதி என்றும், அங்கிருந்து பல நிகழ்வுகள் திடீரென்று நடக்க உள்ளதாக 53-ம் தீர்க்க தரிசனங்கள் பல குறிப்புகளை தெரிவிக்கின்றன.

பல அதிசய நிகழ்வுகள் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் நடக்க உள்ளதாகவும், சாமியாடுதல் என்ற நிகழ்வுகள் இனி அதிகமாக மக்கள் நிறைந்த பகுதிகளில் இடம் பெறும் என்றும், அங்கு நடைபெறும் சில வினோத நிகழ்வுகள் காவல்துறையை குழப்பம் அடையச் செய்யும் என்றும், தமிழகத்தில் சிறப்பு வாய்ந்த கருமாரியம்மன் ஆலயத்தில் ஒரு மகா நிகழ்வு நடக்க உள்ளதாக 53-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது...

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.