03/05/2017

சேகர் ரெட்டி டைரியை புரட்டினா ஜெயிலுக்கு போவது தி.மு.க.,வினர் தான் - தம்பிதுரை புதுகுண்டு...


கரூர் அண்ணா தொழில்சங்கம் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேசுகையில், தமிழகத்தில் வருமான வரிதுறை சோதனை செய்வதின் பின்னணியில் அதிமுக ஆட்சியை கலைக்க பா.ஜ.,செய்து வரும் சதி என தி.மு.க.,செயல்தலைவர் ஸ்டாலின் கூறுகிறார்.

சோதணையில் சிக்கிய சேகர்ரெட்டியின் டைரியை புரட்டினால் அதில் மாட்டுவது தி.மு.க.,வினர் தான். சி.பி.ஐ.,அறிக்கை வெளியே வரும் போது கம்பி எண்ணபோவது யார் என ஸ்டாலினுக்கு தெரியும். அதில் தி.மு.க.,முன்னாள் அமைச்சர்கள் பலர் பெயர் இடம் பெற்றுள்ளது.

அதிமுக ஆட்சியின் ஊழல் என ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்தது தி.மு.க.,ஆட்சியின் தான்.

அ.தி.மு.க., அணிகள் ஒன்று சேர முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் பன்னீர் செல்வமும் பேசி வருகின்றனர். ஒரே இடத்தில் அமர்ந்து பேசினால் முடிவு எட்டும்.

கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா வரவேண்டும் என கையெழுத்து போட்டது பன்னீர்செல்வம்.

ஜெ.,மரணத்திற்கு பிறகு ஓ.பி.எஸ்.,சை மீண்டும் முதல்வராக்கியது சசிகலா குடும்பம் தான்.

அப்போது வாய் திறக்காத பன்னீர் இப்போது சி.பி.ஐ.,விசாரணை கேட்பது வேடிக்கையாக உள்ளது.

தற்போது சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் கட்சியை விட்டு ஒதுங்கி விட்டனர்.

அவர்கள் ஆலோசனை கேட்டு நாங்கள் செயல்படுகிறோம் என்பதில் உண்மை இல்லை, என்றார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.