08/05/2017

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியாவின் நீட் தேர்வு...


மாணவிகளின் உள்ளாடைகளை வளுகட்டாயமாக கழுட்டி சோதனை செய்த மத்திய அரசின் கேடுகெட்ட கல்வித்துறை...

பெண்களின் உள்ளாடைகளை கழற்றச் சொல்லியிருக்கிறார்கள், ஒரு பெண் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்டின் பாக்கெட்டுகளை கத்திரிக்க சொல்லியிருக்கிறார்கள்,  ஜீன்ஸ் பேண்டின் உள்ள இரும்பு பட்டன்களை வெட்டி எடுத்து விட்டு உள்ளே வரச் சொல்லியிருக்கிறார்கள், காதுக்குள் டார்ச் அடித்து பார்த்திருக்கிறார்கள், முழுக்கை சட்டை அணிந்தவர்கள் கையை பாதியாய் கிழித்துக் கொண்டு உள்ளே சென்றிருக்கிறார்கள்..

இந்நிலையில் கேரளா மாநிலம் கன்னூரில் தேர்வு எழுதவந்த மாணவிகளிடம், அதிகாரிகள் உள்ளாடைகளை அவிழ்க்கச் சொன்னதாக மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

தேர்வு எழுத வந்த பெண்கள் கழிவறைக்கு சென்று தங்களின் உள்ளாடைகளை கழட்டிவிட்டு வந்த பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டதாக மாணவிகளின் பெற்றோர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

தேர்வு மைய அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் தேர்வு எழுத வந்த மாணவர்களை மிகுந்த மனவுளைச்சலுக்கு உள்ளாக்கும் வகையில் நடந்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்த உடைசார்ந்த  விதிகள் மாணவர்களை மனரீதியாக அச்சுறுத்த மட்டுமே.. பலர் இதனால் பரிட்சையை தங்களின் முழு திறனுடன் எழுதியிருக்க வாய்ப்பில்லை..

ஏண்டா தேர்வு நடத்துறீங்களா இல்லா மாறுவேசப் போட்டி நடத்துறீங்களாடா..

பஞ்சகச்சம் கட்டி உடலில் பூணுல் மட்டும் அணிய வேண்டும், யோகியை போல் முடிவெட்டியிருக்க வேண்டும், மோடியை போல் தாடி வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறைகளை தெளிவாக நீட் தேர்வின் ஹால்டிக்கட்டில்  அச்சடித்திருக்கலாமே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.