16/08/2017

அரக்கர்...


அரக்கு நிறத்தில் இருப்போர் அரக்கர்.

அசுரன் என்பது வேறு.

சுராபானம் அருந்துவோர் சுரராம்.

அதை அருந்தாததவன் அசுரனாம் அவனே அரக்கன் என்றும் குறிக்கப்படுகிறானாம்.

பொதுமையான அறிவைப் பயன்படுத்தவும்.

ஒரு குறிப்பிட்ட மக்களை வேற்றினத்து மக்கள் அவர்கள் உடல்நிறத்தை குறிப்பிட்டு பெயர்வைத்து அழைப்பார்களா?

இல்லை அவர்கள் குடிக்கும் பானத்தை குறிப்பிட்டு பெயர் வைத்து அழைப்பார்களா?

சுர், சுள், சுல், சுறீர், சுரம் அனைத்தும் நெருப்பைக் குறிப்பது.

சூரன் என்பது கதிரவனைக் குறிக்கும்.
- பாவாணர்.

அதாவது குமரிக்கண்டம் முதல் இமயம் வரை தமிழர் வாழ்ந்த போது, வடக்குத் தமிழர் காலநிலையின் காரணமாக தெற்குத் தமிழரை விட வெளுத்த நிறமாக இருந்திருப்பர்.

அவர்கள் தெற்குத் தமிழரது தோல் சிறிது சிவப்பு கலந்த கரியநிறமாக இருப்பதைக் குறிப்பிட்டு அவர்களை அரக்கர் என்று அழைத்திருப்பர்.

இலக்கியங்களில் இராவணன் அரக்கன் என்று அழைக்கப்பட்டுள்ளான்.

ஆக அரக்கன் இழிவான சொல் இல்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.