23/08/2017

இந்த ரெண்டு பேரும் ஒன்னா சேந்து....


1)  91 நாளா இருக்குற கதிராமங்கலம் பிரச்சனையை தீர்க்க போறாங்களா?

2) 100 நாளுக்கு மேல நெடுவாசல்ல பிரச்சனையை தீர்க்கப் போறாங்களா?

3) மத்திய பிஜேபி அரசோடு போராடி நீட் தேர்வுக்கு நிரந்தர தடை வாங்கித் தரப் போறாங்களா?

4) விவசாயிகளோட கடன தள்ளுபடி பண்ணப் போறானுங்களா?

5)  மோடியோட கிறுக்குத் தனத்தால வேலைய இழந்த லட்சக் கணக்கான பேருக்கு வேலைய கொடுக்கப் போறானுங்களா?

6) ஜி.எஸ்.டி., பணமதிப்பிழப்பால அழிந்துபோன சிறு தொழில்களை தூக்கி நிறுத்தப் போறானுங்களா?

7) மத்திய பிஜேபி அரசோடு போராடி காவிரி பிரச்சனைய தீர்க்கப் போறாங்களா?

மத்திய பிஜேபி அரசோடு போராடி ஹைட்ரோகார்பன் பிரச்சனைய தீர்க்கப் போறாங்களா?

9)  மத்திய பிஜேபி அரசோடு போராடி மீனவர் பிரச்சனைய தீர்க்கப் போறாங்களா?

ஒன்னும் கிடையாது...

தனித்தனியா அடிச்ச கொள்ளைய இனிமே ஒன்னா அடிச்சி ரெண்டா பங்கு பிரிச்சி தொழில டெவலப் பண்ணப் போறானுங்க அவ்ளோதானே, இதுக்கு எதுக்கு இவ்ளோ பிலடப்புன்னு தெரியல?

போனவாரம் வரை, ஈபிஎஸ் தலைமையிலான அரசை ஊழல் அரசு என விமர்சித்து, அரசுக்கு எதிராக போராட்டங்களை அறிவித்த தர்மயுத்த வீரர் ஓபிஎஸ், டெல்லி எஜமானர்களின் உத்தரவையடுத்து, வாலை சுருட்டிக் கொண்டு, இப்போது, பதவி, கமிஷன், மாமூல் குறித்த பேரங்களை பேசி முடித்து, A1 ஊழல் குற்றவாளி, 100 கோடி கோர்ட் அபராத புகழ் ஜெயாவின் சாமாதி முன்பு, அதே ஈபிஎஸ் ஆட்சியில் இணைகிறாராம்... மக்களை கேணையர்களாக நினைத்துவிட்டார்கள் போல...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.