13/09/2017

இத்தாலிக்கு ஏற்பட்ட வரலாற்று அவமானமும், அதற்கு பழி வாங்கும் படலமும்...


1896 காலனிய விஸ்தரிப்புக்காக இத்தாலி தம் அண்டை நாடுகள் மீது படையெடுத்தது அன்றைய காலகட்டத்தில் நவீன ஆயுதங்களை வைத்து தம் அண்டை நாடுகளை அடக்கியது.

ஏறக்குறைய அனைவருமே அடங்கியும் சென்றனர்.

இந்நிலையில் ஆப்பிரிக்க கண்டத்தில் எந்த ஒரு ஐரோப்பிய வல்லரசாலும் காலனியாக்கப்படாத ஒரே நாடு எத்தியோப்பியா தான்.

இந்த பேரை உடைக்க வேண்டும் என இத்தாலி நினைத்தது.

மட்டுமின்றி எத்தியோப்பிய மக்கள் நாகரிகமற்றவர்கள்.

[பொதுவாக அன்றைய காலகட்டத்தில் கறுப்பர்கள் வாழும் நாட்டை அப்படிதான் நினைத்தது உலகம்].

அவர்களுக்கு இந்த நவீன பீரங்கிகள் ஆயுதங்கள் ஏதும் பயன்படுத்த தெரியாது எத்தியோப்பாவை இலகுவாகவே கைப்பற்றி விடலாம் என்று இத்தாலி நினைத்து இருந்தது..

இந்நிலையில் தான் 1896 இல் மார்ச் 1 தேதி இத்தாலி முதல் அறிவிப்பை பிரகணப்படுத்தியது.

எத்தியோப்பாவை நாங்கள்  தாக்க போகிறோம் என்று..

எத்தியோப்பியர்கள் பயந்து நடுங்குவார்கள் என்ற கணிப்பு இத்தாலியர்களுக்கு பொய்யானது..

காரணம்.. எத்தியோப்பியா தொடுத்த பதில் அறிவிப்பு..

ஆம் வில், அம்பு, குதிரை படையுடன், நாங்கள் பதில் தாக்குதல் கொடுக்க தயாராகவே உள்ளோம் என்று அறிவித்தார் தெகுவாவி மேனாலிக்..

இவர் தான் அன்றைய எத்தியோப்பியாவில் அரசர்..

ஆரம்பித்தது Battle of Adwa என்று சொல்லக்கூடிய வரலாற்று சிறப்புமிக்க போர்.

இந்த போரில் எத்தியோப்பியாவை சார்ந்த படையினர் 3867 பேர் இத்தாலி படையினரால் கொல்லப்பட்டனர்.

8000 மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இப்போருக்கு பிறகு உலக நாடுகள்  இத்தாலியர்களை மிகவும் கேவலமாக பார்க்க ஆரம்பித்தனர்.

காரணம்.. இப்போரில் வென்றது எத்தியோப்பியா தான்..

ஆம்  3867 பேர் எத்தியோப்பியார் இப்போரில் இறந்தார்கள் என்று சொன்னேன் அல்லவா..

அதே போன்று எத்தியோப்பியர்கள் இத்தாலியர்களையும் கொன்றார்கள்..

இவர்கள் கொன்ற எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா ?

6394 பேர்...

எத்தியோப்பாவுடன் தோல்வி பெற்ற இத்தாலியை ஏன் உலக நாடுகள் கேவலமாக பார்த்தது என்றால்..

எத்தியோப்பிய படையினர் இத்தாலியர்களை எதிர்கொன்றது துப்பாக்கி பீரங்கி போன்ற நவீன ஆயுதங்களை..

இவர்கள் வசம் வெறும் அம்பு ,வில் ,வால் போன்றவைகள் தான்..

இதை வைத்தே இத்தாலியை ஓட வைத்தது ஐரோப்பாவில் பெரும் அதிர்வலைகள் உண்டானது..

இதற்கு பிறகு தான் எத்தியோப்பாவை உலக நாடுகள் அங்கீகரித்தது..

எத்தியோப்பியா நாகரீகமடையாத காட்டுவாசி தலைவனால் ஆளப்படுகிறது என்ற மாயையை உடைத்து..

போருக்கு பிறகு எத்தியோப்பிய அரசர் மேனிலிக் ஐரோப்பிய அரசர்களுக்கு நிகராக மதிக்கப்பட்டார்..

இத்தாலியும் தோல்விக்கு பிறகு எத்தியோப்பியாவுடன் சமாதான ஒப்பந்தம் போட்டு கொண்டது ...

கடற்கரை ஓரம் உள்ள சில பகுதிகளை மட்டுமே இப்போரில் கைப்பற்றிக் கொண்டது இத்தாலி..

பின்னாளில் இத்தாலியிடமிருந்து விலகி தனி நாடானது...

அந்த பகுதிதான் இன்றைய இரண்டு திருமணம் கட்டாயம் என்ற அறிவித்துள்ள எரித்திரியா நாடு....

இருப்பினும் ஐரோப்பிய வரலாற்றில் அவமானப்பட்ட இத்தாலி பழிவாங்க காத்திருந்தது எத்தியோப்பாவை..

இதற்கு இத்தாலி எடுத்த நடவடிக்க்கை மிகவுமே கொடூரமானது..

ஆம் முசோலினி காலத்தில் எத்தியோப்பியா ?
 
பேசுவோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.