13/09/2017

தமிழகத்தில் எந்த கருத்தியல் உருவானாலும் அது உடனடியாக மண்ணைக் கவ்வுவது ஏன்?


அந்த கருத்தியல் பொருளாதாரம் சார்ந்ததோ,
சாதி சார்ந்ததோ,
மதம் சார்ந்ததோ,
மொழி சார்ந்ததோ,
இனம் சார்ந்ததோ,
மாந்தநேயம் சார்ந்ததோ,
வணிகம் சார்ந்ததோ,
இறையியல் சார்ந்ததோ

எந்தவித கருத்தியலாக இருந்தாலும் குறுகிய காலத்தில் தோல்வியைத் தழுவுவதற்கு காரணம்..

நாம் இனத்திற்கு வெளியே ஹிந்தியாவில் ஆதரவு தேடுவது தான்.

நாம் தற்போது கையிலெடுத்துள்ள தமிழ்தேசியம் பிற இனங்களின் தேசியவாத சக்திகளை சேர்த்துக் கொள்ளும் என்றால் நாம் மீண்டும் மண்ணைக் கவ்வுவது உறுதி.

நாம் ஹிந்தியாவில் வேறு எந்த இனத்திலும் ஆதரவு தேட வேண்டிய அவசியமில்லை.

ஆனால் உலகம் முழுவதும் ஆஸ்திரேலியா முதல் அமெரிக்கா வரை வாழும் தமிழர்களிடம் ஆதரவு திரட்ட வேண்டும்.

அதுவும் தாய்நிலத் தமிழர்கள் ஓரணியில் திரண்ட பிறகே செய்யப்பட வேண்டும்.

தமிழினத்தைக் காப்பாற்றும் முதல் பொறுப்பு தாய்நிலத் தமிழர்களுக்கே உண்டு.

அதை ஓரளவு அவர்கள் நிறைவேற்றியும் வருகிறார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.