13/09/2017

அண்மையில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள நூல்தான் தேவ பேரின்பன் எழுதியுள்ள.. தமிழர் வளர்த்த தத்துவங்கள்...


எங்கள் தத்துவமே ஆதியில் பிறந்தது ; நாங்களே மூத்த குடி” என்பன போன்ற வறட்டுப் பெருமை பேசாமல்

உலகம் முழுவதுமான தத்துவங்களின் பொதுபோக்கோடும் ; இந்திய தத்துவங்களின் போக்கோடும் இணைத்து தமிழர் தத்துவ வளர்ச்சியை நூலாசிரியர் அலசியுள்ளது குறிப்பிடத்தக்கது......

இது மார்க்சிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வமான பத்திரிக்கையான தீக்கதிரில் வந்துள்ள நூல் விமர்சனம்

வள்ளத்தோலை வாரி மலையாளிகள் தோளில் போட்டுக் கொண்டாடும் போது உங்களுக்கு வெற்றுப் பெரிமிதமாகத் தெரியவில்லை,

வங்கக் கவி ரவீந்திரநாத் தாகூரை தலையில் வைத்து வங்காளிகள் கொண்டாடும் போது உங்களுக்கு வெற்றுப் பெருமை என்று உங்களுக்குத் தெரியவில்லை,

யக்ஞவல்லரை கன்னடன் வானளாவப் புகழும்போது உங்களக்கு வெற்றுப் பெருமிதமாகத் தெரியவில்லை.

ஆனால் உலகப் பொதுமறை தந்த வள்ளுவனையும், தமிழுக்கு இலக்கணம் மட்டும் அல்லாமல் ஒரு அறிவியல் கலைக் களஞ்சியமாகவே வடித்துத் தந்த தொல்காப்பியரையும் ,எண்ணற்ற பொதுமைத் தமிழ் இலக்கியங்களையும் படைத்த எம் தமிழ் முன்னோர்களை கொண்டாடினால் உங்களுக்கு வெற்றுப் பெருமிதமாகத் தெரிகிறது.

அப்படியானால் தீக்கதிர் பத்திரிக்கையே நீ யார்?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.