13/09/2017

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் ரேசன் பொருட்கள் வழங்க கெடுபிடி விதிகள்?


தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இப்படி செய்கிறார்கள்..?

இந்திய ஒன்றியத்துலயே தமிழ்நாட்டில் தான் 99% ரேசன் பொருட்கள் உரியவருக்கு போய் சேர்கிறது வறுமை ஒழிப்பு தொடர்பாக நடந்த ஒரு ஆய்வு சொல்கிறது.

மற்ற மாநிலத்தில் எத்தனை சதவீதம் என்று கேக்குறீங்களா?

மற்ற எந்த மாநிலத்தில் இப்படி ஒரு திட்டமே இல்லை.

பல மாநிலங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழ் (B.P.L) இருக்குறவங்களுக்கு மட்டும்தான் ரேசன் கொடுக்கிறாகள்.

ஆனால் அந்த பிபிஎல் கார்டு வச்சிருக்குற அத்தன பேரும் பணக்காரனாத்தான் இருப்பான்.

அவன் பிபிஎல் கார்டு வச்சிருக்குற பெரிய ஆளு'னு மக்கள் நெனைக்குற அளவுக்கு வடயிந்தியாவுல ஆளும் வர்க்கத்தோட அடையாளமாக அது ஆகிப்போச்சு.

ஆளும் வர்க்கமே அது மூலமாக வருவதை பங்கு போட்டுக்குவாங்க.

பொருள் வந்து அப்பறம் அதை பதுக்கி அடுத்து கொஞ்ச கொஞ்சமா திருட்டுத்தனமா பிளாக்ல விக்கிறதெல்லாம் கிடையாது.

அரசாங்க குடோன்ல இருந்து நேரா தனியார் குடோனுக்கு போயிரும்.

சில நேரம் தனியார்களுக்கு சப்ளை லைனுக்கே போய்ச்சேரும்.வெளிப்படயா நடக்கிறது.

தமிழ்நாட்டிலௌ எதோ புண்ணியவான்கள் கொஞ்சம் மிச்சமிருக்கறதால பீத்த அரிசியா இருந்தாலும் மக்களுக்கு போய்ச்சேருது.

ஓரளவு ஒழுங்கா போய்க்கிட்டிருக்க திட்டத்த கெடுத்து கொழப்பி அதை வடயிந்தியப் பாணில அப்பிடியே லம்ப்பா ஆட்டய போட வழி பாக்குறானுக.

எந்த ஏழையாவது தங்களோட ரேசன் நடுத்தர வர்க்கத்துக்கு போகுறதால பற்றாக்குறைனு போராட்டம் பண்ணாங்களா?

இல்லையே..

ஒரு நாட்டை எப்படி ஆளக்கூடாது ஒரு புத்தகம் எழுதறவன் இங்க வந்து நடக்குறத அப்படியே எழுதினா போதும்.

எதையும் கொடுக்கத்தான் துப்பில்ல.
கிடைக்கிற கொஞ்ச நஞ்சத்தயாவது விடுங்கடா..

கொள்ளைக்கார பாவிகளா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.