29/11/2017

நீங்களே படைப்பாளி...


முதலில் நாம் தேவையை உருவாக்காமலேயே, நமக்கு அது கிடைக்கவில்லை இது கிடைக்கவில்லை என வருந்துகிறோம்.

இப்போதே உங்கள் தேவைகள் அனைத்தையும் பட்டியல் இடுங்கள்.

அதை மனதில் அடிக்கடி நினைத்து வாருங்கள்.

உங்களுக்கு தேவையற்ற விடயங்களை மனதில் போட்டு உழற்றாமல் மகிழ்ச்சியான மன நிலையில் எப்போதும் இருங்கள்.

உங்கள் எண்ணம் ஒவ்வொன்றாக நிறைவேற துவங்கும்.

ஆம் மனதால் ஆழ்ந்து நினைப்பதை பிரபஞ்சம் கொடுத்தே ஆக வேண்டும் என்பதே அதன் நியதி.

அப்படி மனதால் படைக்கப் பட்டதே பிரபஞ்சம். ஆம் உங்கள் மனதால் வேண்டியதை படைத்துக் கொள்ளுங்கள்.

இந்த பிரபஞ்சத்தை படைத்த அந்த மாபெரும் சக்தியே நீங்கள்தான்.

வாழ்க்கை அற்புதமானது. அதை கொண்டாடுங்கள். அன்பு என்கிற விசைதான் அனைத்தையும் இயக்குகிறது.

உங்கள் வாழ்க்கையை வழக்கம் போல் நகர்த்தாமல் சற்று மாற்றி பாருங்கள், அனைத்தும் மாறும் இது சத்தியம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.