23/03/2018

காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து விவாதிக்க கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில், அம்மாநில எம்.பி.,க்கள் இன்று(மார்ச் 22) ஆலோசனை நடத்த உள்ளனர்...


காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்பில், கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி., காவிரி நீரை ஒதுக்கி உத்தரவிட்டிருந்தது. இத்தீர்ப்பு குறித்து மார்ச் 8ல் கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் பெங்களூருவில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தது. கூடுதல் நீர் ஒதுக்கீடை ஆதரித்த கர்நாடக அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை எதிர்த்தது.

இந்நிலையில் காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க முதல்வர் சித்தராமையா தலைமையில் பெங்களூருவில் இன்று (மார்ச் 22) கர்நாடக எம்.பி.,க்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.