15/03/2018

நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலைகெட்ட மாந்தர்களையென்னி...


கடலுக்குள் போகாதே கச்சதீவை
விற்றுவிட்டோம்..

காட்டுக்குள் போகாதே நீயூட்ரினோக்கு விற்றுவிட்டோம்..

காவேரிகரைக்கு போகாதே மணலை விற்றுவிட்டோம்..

விவசாயம் செய்யாதே ஹைட்ரோகார்பனுக்கு விற்றுவிட்டோம்..

மருத்துவம் படிக்காதே வடஇந்தியருக்கு(நீட்) விற்றுவிட்டோம்..

TNPSC எழுதாதே தமிழே தெரியாதவனுக்கு விற்றுவிட்டோம்..

நெல்லைக்கு போகாதே ரஷ்ய அனுஉலைக்கு விற்றுவிட்டோம்..

தூத்துக்குடிக்கு போகாதே ஸ்டெர்லைட்டுக்கு விற்றுவிட்டோம்..

ராம்நாடு போகாதே அதானி மின்திட்டத்துக்கு விற்றுவிட்டோம்..

தஞ்சாவூர்க்கு போகாதே மீத்தேனுக்கு விற்றுவிட்டோம்..

நாகை போகாதே பெட்ரோகெமிக்கலுக்கு விற்றுவிட்டோம்..

மலையேற போகாதே க்ரானைட் குவாரிக்கு விற்றுவிட்டோம்..

வெள்ளயங்கிரி போகாதே ஜக்கிவாசுதேவ்கு விற்றுவிட்டோம்..

சதுரகிரிக்கி போகாதே யாருக்கோ _______ விற்கபோகிறோம்..

எந்த கருமத்தையும் கண்டுக்காதே ஏனெனில் உன் வாக்கை நீ விற்றுவிட்டாய்...

 நாங்க விலைகொடுத்து வாங்கியதை லாபத்திற்கு விற்றுவிட்டோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.