15/03/2018

கர்நாடகத்தில் தமிழர் கடைகளை எதிர்த்து கன்னடர்கள் வன்முறை...


சென்னையில் தி நகர்  வெங்கட்நாராயணா ரோடு அறியாதவர் யாரும்  இருக்கமுடியாது...

 இது ஒரு தெலுங்கு பேசும் மக்களின் கோட்டை என்று சொல்லலாம்.

இந்த சாலையில் உள்ள நடேசன் பூங்கா முன் ஒரு தள்ளு வண்டி தோசைக்கடை இருக்கும் . இது ஒரு கன்னடக்காரர் கடை . தள்ளுவண்டியில் வைத்து இருப்பதால் இவர்கள் ஏழை என்று எண்ணி விடக் கூடாது இவர்களுக்கு பாண்டி பஜார் பிரிலியன்ட் டூட்டோரியல் அருகே மிகப் பெரிய ஹோட்டல் இருந்தது .

அந்த ஹோட்டல் இருக்கும் போதே பிரிலியன்ட் டூட்டோரியல் முன் தள்ளு வண்டி கடை போட்டு மிகப் பெரிய வியாபாரத்தை தக்க வைத்துக் கொண்டவர்கள்.

இப்ப நடேசன் பூங்கா முன்பும் ஒரு தள்ளுவண்டி கடை இருக்கு. நல்ல வியாபாரம் . இந்த சாலையில் வேறு யாரும் தள்ளு வண்டி கடை போட்டால் காவல் துறை வைத்தே இவர்கள் மிரட்ட முடியும்  என்று செய்திகள் உண்டு.

உடனே காவல் துறை லஞ்சம் வாக்கிட்டு இப்படி செய்கின்றது  எனறு கற்பனை செய்து விட வேண்டாம்.

இந்த கன்னட பணக்கார  தள்ளு வண்டிகாரரிர்க்கு   பிற மொழி காவல் துறை உயர் அதிகாரிகள் ஆதரவு எப்பவும் இருக்கும்.

சென்னையில் பிற மொழிக்காரர்க்ள் எங்கும் வியாபாரம் செய்யலாம் காவல் துறை தடுக்காது கார்புரேசன் தடுக்காது..

அதற்கு முக்கிய காரணாம் பிற மொழிக்காரர்கள் உயர் அதிகாரிகளாக இருப்பதே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.