15/03/2018

இந்தியப் புற்று நோயால் செயலிழந்து வரும் தமிழினம்.. இந்தியா என்பது புற்றுநோய்...


இந்தியப் புற்றுநோய் குறித்து 25 வருடங்களுக்கு முன்பே தெரிந்திருந்தும் அதுகுறித்து அதிக கவனம் செலுத்தாததால் இன்று தமிழினம் தனது இருப்பைத் தொலைத்து அழிவடையும் உச்சத்தை எட்டியிருக்கிறது.

மன்னர்கள் ஆட்சிக்காலத்திற்கு பின்னர் ஏராளமான வரலாற்று படிப்பினைகளையும் நமது மூதாதேயரின் வாழ்வு பற்றியதுமான ஏராளமான பொக்கிசங்கள் இருந்தும் அதை தூசுதட்டி தலைமுறை தலைமுறையாக சொல்லிக் கொடுப்பதைவிடுத்து சினிமா ரசிகர்களாகவும் கிரிக்கட் ரசிகர்களாகவும் மாற்றப்பட்டனர் தமிழர்கள்.

விதிவிலக்காக உரிமை மறுப்பை எதிர்த்து வீட்டுக்கு வீடு ஆயுதம் தூக்கி எதிரியை களத்தில் சந்தித்தது தமிழீழம். இருந்தாலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மூடி மறைத்து எவ்வளவு விரைவாக தமிழகத்தை சல்லடைபோட்டு செயலிழக்க செய்ய முடியுமோ அவ்வளவிற்கு செயலிழக்க பண்ணிவிட்டு தமிழீழத்தை சூறையாடியிருக்கிறது இந்தியப் புற்று நோய்.

கல்வெட்டுக்களில் இருக்கும் தமிழ் மன்னர்களின் வீர வரலாறு தமிழீழ தாயமெங்கும் வியாபித்து நிற்கும் பொழுது திரைச்சீலைகளுக்கு பின்னால் கவர்ச்சி நடிகைகளின் நடனங்களை பார்த்துக் கொண்டிருந்த தமிழகம் இன்று தன்னை சுதாகரித்துக் கொள்ள முயற்சித்தாலும் இந்தியப் புற்று நோயால் முழுமையாக பீடிக்கப்பட்டு எப்படி தன்னை காப்பாற்றிக் கொள்வதென்று தெரியாமல் திணறுகிறது.

இந்த பூமிப்  பந்தில் எட்டுக் கோடிக்கு மேல் ஒரே மொழிபேசும் இனமாக, ஒரே இலக்கணம் கொண்ட சனமாக, ஒரே இலக்கியத்தை படிக்கும் மக்களாக இருந்தும் தனக்கென்று சொந்த நிலமும் அதற்கொரு கொடியும் தனியொரு படையும் கொண்ட அரசாக, தன்னைத்தானே ஆழும் இனமாக தமிழினம் இல்லாததற்கு காரணம் இந்தியப் புற்றுநோய்தான் என்றால் மிகையாகாது.

சாதிபேதங்கள் இன்றி, வரட்டுக் கௌரவங்கள் இன்றி, ஊழல் இன்றி இன விடுதலையை மட்டுமே இலட்சியமாக கொண்டு தங்களால் தனிப்பெரும் படையை கட்டியெழுப்பவோ அல்லது ஆழும் அந்திய சக்திகளுக்கு எதிராக போரிடவோ தெரியாத அல்லது முடியாத தமிழகம் ஆகக்குறைந்தது இந்திய வல்லூறுகளை தமது சொந்த நாட்டுக்குள் முடக்க தெரிந்திருந்தால் கூட இன்று "தமிழீழம்" என்ற தனிப்பெரும் தமிழர் நாடு மலர்ந்திருக்கும்.

சொல்வதற்கு கடினமானதென்றாலும் ஒரு உண்மையை சொல்லியே ஆகவேண்டும். தன்னைத்தானே வருத்தும் தியாக மனப்பாண்மை கொண்ட தமிழக வீரர்களால் எதிரியை திணறடிக்கவோ அல்லது எதிரியின் சூழ்ச்சியை புரிந்து அதற்கேற்போல் போராடவோ தெரியாது.

இன உணர்வுடன் தன் சொந்த மக்களை மட்டுமே நம்ப கூடியதும் தன் சொந்த மக்களை வைத்து எந்தப்பெரும் அரசையும் ஆட்டம் காண வைக்க முடியும் என்ற நம்பிக்கை வைத்து ஒரே இலட்சிய கொள்கையுடன் களத்தில் இறங்கி மக்களை வழிநடத்தக் கூடிய தலமை தமிழகத்திற்கு அவசரமாக தேவைப்படுகிறது.

தமிழ் மன்னர்களின் வீர வரலாறுகள் மூடி மறைக்கப்பட்டு திட்டமிடப்பட்ட வகையில் வரலாறுகள் அழிக்கப்படுவதாக சொல்கிறார்கள்.

சொந்த நிலமும் தன்னைத்தானே ஆழும் ஆட்சியும் என்பது ஒரு இனத்தின் பாதுகாப்பு மற்றும் இருப்பு. தமிழீழத்தை சுவம்சம் செய்து பறித்து  சிங்களத்திடம் கொடுத்த இந்தியம் தமிழகத்தை நாசுக்காக கூறுபோட்டுவிட்டது.

இன்றைய நிலவரத்தில் தமிழகத்தில் தமிழ் மக்கள் ஒன்று திரண்டு தமக்காக போராட முடியாத அடிமை நிலமை ஏற்படுத்தியாகிவிட்டது. அடக்கு முறைக்களுக்கு எதிராக தொடர்ச்சப் போராட்டங்களை செய்யவும் சூழ்நிலைக்கேற்றவாறு அதன் வடிவத்தை மாற்றவும் முடியா நிலை உருவாக்கப்பட்டுவிட்டதாகவே தெரிகிறது.

தமிழகமே...

இனிவரும் தமிழினத்தின் சந்ததிக்காகவேனும் உனக்கென்றொரு செங்கோல் ஆட்சியை உருவாக்கு.

மத - சாதிகளால் பிளவுண்டு கிடக்கும் முட்டாள்களே...

உங்கள் பெற்றோர்களையும் பெற்றோரின் பெற்றோர்களையும் திட்டமிட்டு சகதிக்குள் தள்ளியிருக்கிறான் எதிரி அதன் தொடரச்சியாக அந்த சகதிதான் உங்கள் வாழ்கை என்று உங்கள் தலைமுறையையும் அந்த சகதி நாற்றத்திற்குள் வைத்திருக்காதீர்கள்.

தனி இனமாக தமிழ் இனமாக இந்த ராஜ்ஜியத்தை ஆண்டது தான் தமிழினம்.

தமிழினமாக உருவெடுங்கள்.

தமிழனத்திற்கு எதிராக பேசுபவர்கள் முதல் செயற்படுபவர்களை உங்கள் மண்ணில் இருந்து விரட்டுங்கள். இறுக்கமாகவே இருங்கள். இறுக்கம் இனத்தை காக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.