14/03/2018

அய்யாகண்ணு திமுகவால் இயக்கப்படும் பினாமி என்று என்றோ சொல்லி விட்டோம்...


அந்த பழைய பதிவு இது...

அய்யாக்கண்ணு 1970 ஆண்டிலிருந்து திமுகவின் உறுப்பினர்...

திமுக உறுப்பினர் அட்டை வைத்து இருக்கிறார்..

அவரது மகளை மு.க. ஸ்டாலினின் சொந்தத்தில் திருமணம் செய்து கொடுத்து இருக்கிறார்.

மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்  பேரிலேயே டெல்லியிலும் சென்னையிலும் போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்.

இதற்காக கோடிக் கணக்கில் பணம் பெற்று இருக்கிறார்.

மீத்தேன் விஷயத்தில்  தமிழக  விவசாயிகள் ஸ்டாலின் மேல் கொண்டிருக்கும் கோபத்தை மறைத்து, அவர்களை மறுபடியும்  திமுகவின் பக்கம் அழைத்து செல்லும் வேலையை அய்யாக்கண்ணு மேற்கொண்டு இருக்கிறார்.

இவரது போராட்ட களத்துக்கு மற்ற தலைவர்கள் வரும் போது இல்லாத ஒரு சந்தோஷம் ஸ்டாலின் வரும் போது மட்டும் நூறு மடங்கு பொங்கி வழியும் இவருக்கு..

விசாயிகளுக்கு நட்ட ஈடு தருவதைக் காட்டிலும், மீத்தேன் விஷயமே ஒட்டு மொத்த  தமிழகத்துக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் விஷயமாகும்.

அப்படி இருக்கும் போது மீத்தேன் விஷயத்தை பேசாமல், விவசாயிகளுக்கு நட்ட ஈடு, இழப்பீடு என்று பேசி, மீத்தேன் விஷயத்தில் இருந்து மு.க. ஸ்டாலினை காப்பாற்றி வருகிறார் இந்த அய்யாக்கண்ணு.

அப்படி இல்லாவிட்டால், போராட்ட களத்துக்கு வரும் மு.க. ஸ்டாலினின்  சட்டையைப் பிடித்து, இவர்  மீத்தேனுக்கு கையெழுத்துப் போட்டுட்டு இப்ப எங்கடா இங்க வந்தே படவா ராஸ்கல் ? என்று கேட்டு இருப்பார். ஆனால் அப்படி செய்யவில்லையே...

ஸ்டாலின் வந்து விட்டால் போதும் குதி குதி என்று குதிக்கிறார் அதை உன்னிப்பாக கவனியுங்கள்...

குறிப்பு : திமுக போராட்டத்திற்கு ஸ்டாலின் அழைத்தார் என்ற ஒரே காரணத்திற்காக டெல்லி போராட்டத்தை நிறுத்தி விட்டு திமுக போராட்டத்தில் கலந்து கொண்டு விருந்து உண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது...

விவசாயிகளின் துரோகி அய்யாக்கண்ணு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.