27/03/2018

உண்மையை உணருங்கள்...


முகநூலை திறந்தாலே தமிழகம் அழியபோகிறது என்ற மரண ஓலம், தொலைக்காட்சியில் தொடர்ந்து தமிழகத்தில் வளர்ச்சி திட்டம் அறிவிப்பு என்ற பெயரில் தொடர்ந்து மக்கள் மனதில் பீதியும்,கலவரமும் விதைக்கபடுகிறது, தமிழகத்தின் எதிர்கால நிலை பாலைவனம் என்ற எண்ணம் பதிய வைக்கபடுகிறது. அதன் தாக்கம் தான் முகநூலில் மரண ஓலம்.

ஒரு விடயத்தை தெரிந்து கொள்ளுங்கள் இப்போது நடக்கும் நிலவின் வளர்பிறை என்பது மிகவும் நேர்த்தியான வளர்பிறை, இந்த வளர்பிறையின் தனித்துவம் ஒரு கட்டத்தின் மையத்தில் உருவாக்கப்படும் சுழற்சியை போன்று மிகத்துல்லியமான சுழற்சி இதனை கொண்டு நிலத்தில் உருவாக்கப்படும் அதிர்வலைகளாக இருந்தாலும் சரி மனிதனின் நினைவலைகளாக இருந்தாலும் சரி அது மிகத்துல்லியமான விதத்தில் செயல்படும்.

எனவே தான் இங்கு மக்களிடம் ஒரே மாதிரியான அச்சம் கலந்த அதிகளவிலான அவர்களுக்கு சாதகமான நினைவலைகள் தோற்றுவிக்கபடுகிறது முதலில் உங்கள் மனதில் இது போல் தோற்றுவிக்கும் எண்ண அலைகளை நிறுத்துங்கள்.

இயற்கையிடம் வளமிக்க தமிழகம் உருவாக வேண்டி எண்ண அலைகளை எழுப்புங்கள் இயற்கை மீட்சி பெற எண்ணுங்கள், நீங்கள் உறங்க போகும் போதும் , தூங்கி எழுந்த பிறகும் இதையே நினையுங்கள் இயற்கை மீட்சி பெற தேவை இல்லாத எண்ண அலைகளை உருவாக்குவதை நிறுத்துங்கள், மிக அதிக அளவிலான நேர்மறை எண்ணங்களை உருவாக்குங்கள்.

வரலாற்றில் தமிழகம் இதுபோல் சூழ்நிலையை சந்திப்பது இது முதல்முறை அல்ல அளவுக்கு மீறிய மனித செயல்கள் அனைத்தும் இயற்கையால் முறியடிக்கபட்டுள்ளது, அதீத நாகரிக வளர்ச்சியின் மூலம் ஏற்படும் இயற்கை அழிப்புகள் எல்லாம் கடலாலும், மணலாலும்,காடுகளாலும் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. வரலாறை ஆராய்ந்து பாருங்கள் புரியும்.

இந்த நிலவின் வளர்பிறையை இயற்கை மீட்சி பெறவும் நேர்மறை எண்ணங்கள் உருவாகவும் பயன்படுத்துவோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.