20/06/2018

கிருஷ்ணகிரியில் உழவனின் உரிமைப்போர்...


கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டாரத்தில் பவர்கிர்ட் நிறுவனம் விளைநிலங்களை அழித்து , உழவர்களை மிரட்டி மின்கோபுரம் அமைக்கும் பணியை அடாவடியாக செய்துவருகிறது.

மத்திய அரசின் பவர்கிர்ட் நிறுவனம் சத்திஸ்கர் மாநிலம் இராய்ப்பூரில் இருந்து திருப்பூர் மாவட்டம், இச்சிப்பட்டி புகழூருக்கு 800KV மின்கோபுர பணியை மேற்கொண்டு வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் , போச்சபள்ளி வட்டார விவசாயிகள் தங்கள் விளைநிலங்கள் வழியாக கொண்டு செல்ல கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறார்கள், இந்நிலையில் வருவாய் துறையினரும் , காவல்துறையினரும் உழவர்களின் குரல்வளையை நெருக்கிவருகிறார்கள்.

காவல்துறையினர் 400 மேற்பட்டோர் , துணை இராணுவம் , வஜ்ரம் வாகனம் , கண்ணீர் புகை குண்டு எரியும் வாகனம் , தீயணைப்பு வாகனம் என்று கிரமத்துக்குள் நிறுத்தி அணிவகுத்து உழவர்களை அச்சுருத்து அராஜக வழியில் செயல்படுவது ஏன் ?.

தனது விளைநிலத்திற்காக போராடும் உழவர்களை தற்கொலைக்கு தூண்டியும் , காவலர்கள்  உழவர்களை துரத்தி கிணற்றில் தள்ளியும் , ஊரைவிட்டு விரட்டியும் மத்திய மோடி அரசு இரும்புக்கரம் கொண்டு  ஏழை அப்பாவி உழவர்களை அழித்திக் கொண்டிருக்கிறது.

பெருநிறுவனத்திற்கு மக்களை தாரைவார்க்க துடிக்கிறது மோடி அரசு , வளர்ச்சி யாருக்கு ஏழை, எளிய மக்களுக்கா இல்லை கார்ப்ரேட் முதலாலிக்க.

தற்போது மக்கள் தங்கள் விளைநிலங்களில் குடியேறி உள்ளனர். நமது பாட்டன் , பூட்டன் சம்பாதித்து பாதுகாத்த நிலத்தை அபகரிக்கும் செயலை அரசே செய்வதுதான் சனநாயகம்மா ? இதுக்குத்தான் ஓட்டுபோட்டார்களா ?
 
மக்களே ஆதரவு தாருங்கள் கிருஷ்ணகிரி உழவனுக்கு வாழ்வு தாருங்கள்..

பெரும்பாலான ஊடகங்களால் மறைக்கப்பட்ட செயௌதி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.