20/06/2018

நாசா மர்மங்கள்- - நிலவின் ரகசியம்...


1969,ஜூலை 20ஆம் நாள்
அமெரிக்காவின் அப்போல்லோ 11 என்ற
விண்கலம் நீல் ஆம்ஸ்ட்ராங்(Nei l
Amstrong),பஸ் ஆல்ட்ரின்(Buzz
aldrin) மற்றும் மைக்கல் கொலின்ஸ்
(Michea l Collins)என்ற மூன்று
மனிதர்களை தாங்கி நிலவில்
இறங்கியது.

பின் நீள் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் இருவரும் நிலவில் இறங்கி அமெரிக்க தேசிய கோடியை நிலவில் நட்டு விட்டு வெற்றிகரமாக பூமியை
வந்தடைந்தனர்.

இது பள்ளியிலேயே படித்த விஷயம்
இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா?

இந்த வரலாறே தவறு என்று சொன்னால் நமபுவீர்களா. நம்புவது கொஞ்சம் கடினம்தான்.

1969 ஜூலை 20 வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு நடைபெற போவதால் அமெரிக்காவே பெரும் எதிபார்ப்போடு இருந்தது, நாசாவிலிருந்து ரேடியோ வாயிலாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் நிலவில் இறங்கும் நிகழ்வு நேரடியாக ஒலிபரப்பு செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.

எலோரும் ஆர்வமாக கவனித்து கொண்டிருக்கும் வேளையில் திடீரென ஒலிபரப்பு இரண்டு நிமிடம் தடைப்பட்டது.

பின்னர் மீண்டும் ஒலிபரப்பு கிடைக்க நிலவில் விண்கலம் இறங்கியதாக அறிவிக்கப்பட எல்லோரும் உற்சாகமடைந்தனர்.

ஆனால் ஒலிபரப்பு தடைபட காரணம்
இரண்டு தொலைக்காட்சி கேமராக்கள்
சூடு அதிகமாகி ஒளிபரப்பை நிறுத்தியதாக நாசா தெரிவித்தது.

திமோதி குட் 1988இல் எழுதிய எபவ்டாப் சீக்ரெட் (ABOVE TOP SECRET) எனும் நூலில் உண்மையில் நாசாவில் நடந்தது என்ன என்பதை விரிவாக கூறியுள்ளார்.

தடைபட்ட அந்த இரண்டு நிமிடங்கள்
அப்போல்லோ 11 வின்கலதுக்கும்
நாசாவுக்கும் நடந்த ரேடியோ
உரையாடல் தமிழாக்கத்தில்...

[விண்வெளி கட்டுபாட்டு மையம்:
விண்வெளி கட்டுப்பாட்டு
மையத்திலிருந்து அழைக்கிறோம்
அப்போல்லோ 11 அங்கு என்ன
நடக்கிறது.....

அப்போல்லோ 11: இவை மிகவும்
பெரிதாக உள்ளன. ஓ ... ஆச்சரியம்
.... கடவுளே. சார் .... இதை நீங்கள் நம்ப
மாட்டீர்கள் இங்கே நமக்கு அருகில்
வேறு சில பெரிய விண்கலங்கள்
உள்ளன. அவை எங்களை
கண்காணிப்பதை போல் உள்ளது. ]

அந்த சமயத்தில் அவர்களது
விண்கலத்தை இரண்டு பெரும் UFO-
க்கள் பின் தொடர்ந்ததாக சில நாசா
விஞ்ஞானிகள் தெரிவித்ததாக
செய்திகள் உலா வந்தன.

ஆம்ஸ்ட்ராங்கும் , ஆல்ட்ரினும் நிலவில் நடந்த போது, தங்களுக்கு மேலே சில ஒளி வட்டங்களைக் கண்டதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

அதுமட்டுமமல்லாமல் அவற்றைப்
படங்களும் எடுத்திருக்கிறார்கள்.

நிலவில் இருந்து கொண்டு பூமியுடன்
அவர்கள் பேசியபோது, தங்களை யாரோ
கண்காணிக்கிறார்கள் என்று
சொல்லியும் இருக்கிறார்கள்.

ஏலியன்களின் விண்கலங்களையும் ,
அவர்கள் நிலவில் அமைத்திருந்த
அமைப்புகளையும் கூட, ஆம்ஸ்ட்ராங்
படங்கள் எடுத்ததாகச் சொல்கிறார்கள்.

இவையெல்லாம் ஒரு வதந்தி என்னும்
நிலையில் உலகம் நம்பாமல் இருந்த போது, துணிச்சலாக ஆல்ட்ரின்
இதைத் தொலைக்காட்சிகளுக்கும்,
பத்திரிககைகளுக் கும்
வெளிப்படையாகச் சொன்னார்.

ஆல்ட்ரின் கொடுத்த பேட்டிகள் பலரை
அதிர வைத்தது..

உலகின் பாதுகாப்பான இடமாகக்
கருதப்படும் நாஸாவில் அதற்கு
அப்புறம் ஒரு சம்பவம் நடந்தது.

அப்போலோ 11இல் சென்றவர்கள்,
நாஸாவுடன் உரையாடிய ஒலி,
ஒளிநாடா திடீரெனக காணாமல்
போனது.

குறிப்பிட்ட நிமிடங்கள் உள்ள
அனைத்துப் பதிவுகளும்
அவற்றிலிருந்து அழிக்கப்பட்டன.

இவை ஏன் நடந்தது என்பது இதுவரை
தெரியாத மர்மமாகவே இருக்கிறது.

நிலவில் கால் பதித்த ஆறாவது நபரும்,
அப்போலோ 14விண்கலத்தின் மூலம்
சந்திரனுக்குச் சென்றவருமான 'எட்கார்
மிட்ஜெல்' (Dr.Edgar Mitchell) என்பவர்..  ஏலியன் இருப்பதாகச் சொல்வதை முழுமையாக ஆதரிக்கிறார்.

தங்களுக்கு நடந்த சம்பவங்களையும்,
நாஸாவில் தான் பணிபுரிந்த போது
அறிந்து கொண்டவைகளையும் வைத்து, பூமிக்கு ஏலியன்கள் பல தடவை வந்து போனது நாஸாவுக்குத் தெரியும் என்றும்.

அதை 60வருட காலங்களாக நாஸா மறைத்து வைத்திருக்கிறது என்றும் பேட்டியில் அவர் சொல்லியுள்ளார்.

இவர் கூறியுள்ள தகவல்கள் ஏலியன்
விசயத்தில் மிகவும் முக்கியத்துவம்
வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.

ஏலியன்கள் மனிதர்களின் உருவத்தைப்
போலவே இருந்தாலும், சிறிய உருவமாக இருந்ததாகவும், அவற்றின் கண்கள் பெரிதாக இருந்ததாகவும் அவர்
சொல்லியிருக்கிறார்.

மர்மங்கள் தொடரும்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.