20/06/2018

என் பெயர் சாரைப் பாம்பு...


எனக்கு கொஞ்சமும் விஷம் கிடையாது. பார்க்கத்தான் பத்தடி நீளம் இருப்பேன்... பரபரப்பா ஓடுவேன். அது எல்லாம் உங்களை தொந்தரவு செய்ய இல்லை.

உங்களின் வயல்வெளிகளில் நெல் போன்ற தானியங்களை கொள்ளை அடிக்கும் எலிகளை பிடிக்கத்தான்.

அதனால் விவரம் தெரிந்தவர்கள் என்னை விவசாயிகளின் நண்பன் என்றும் சொல்வார்கள்.

அதே போல எனக்கும் நல்லபாம்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ...

அன்புள்ளங்களே அடுத்து வரும் மழைக்காலங்களில் என் சகோதரர்கள் யாராவது உங்கள் இருப்பிடங்களில் தவறி வந்து விட்டால் மதுரையின் வனத்துறையை அணுகுங்கள்.

உங்களுக்கு உதவி செய்யவே மதுரை மாவட்டம் முழுவதும் பலருக்கு எங்களை கையாளும் கலையை சொல்லி கொடுத்து இருக்கிறார்கள்...

அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.

என் நண்பர்கள் மதுரையின் வனத்துறை +(91)-452-2536279, 2535022, திருமங்கலம் பகுதியில் எந்த உதவி தேவைப் பட்டாலும் இரவீந்திரன் - 98431 36786, கிருஷ்ணமூர்த்தி- 8608512338, திருப்பரங்குன்றம், பசுமலை, நாகமலை,திருநகர், நிலையூர் பகுதிகளில் பாம்புகள் மீட்பு குளுவிஸ்வா 9940832133, சகா 9865024456 இவர்களை தொடர்பு கொள்ளுங்கள். அவசியம் உங்களுக்கு உதவுவார்கள்.

நம்புங்கள் நாங்கள் நல்லவர்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.