09/08/2018

ராஜாஜி அரங்கில் கூட்ட நெரிசலில் இரண்டு பேர் நசுங்கி பலி...


சென்னை காவேரி மருத்துவமனையில் கலைஞர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு உயிரிழந்தார். அவரது உடல் சென்னை ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர் மற்றும் பிரமுகர்களோடு பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும் தமிழகம் முழுக்க இருந்து திமுக தொண்டர்கள் குவிந்து வருகிறார்கள். இதனால் சென்னை நகரமே தொண்டர்களால் நிரம்பி வழிகிறது. தலைவரின் முகத்தை இறுதியாக ஒருமுறை பார்த்து விட மாட்டோமா என்று என்ற ஏக்கத்தில் உள்ளனர்.

அதுபோல சென்னை மெரினா பீச்சில் உள்ள பெரியார் சிலை முன்பு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். அப்போது தொண்டர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதில் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த செண்பகம் (60) மற்றும் 60 வயது மதிக்ககத்தக்க மற்றொருவரும் உயிரிழந்தனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.