09/08/2018

இறந்தவரை எரிக்க முயன்றபோது உயிரோடு எழுந்த அதிசயம்.. அலறி அடித்து ஓடிய உறவினர்கள், வெட்டியான்...


உத்தரபிரதேச மாநிலம் அசாம்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹாசங்கர். இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனிளிக்காததால் இறந்து விட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர்.

எனவே உறவினர்கள் அவரை வீட்டுக்கு எடுத்து வந்து இறுதி சடங்குகள் எல்லாம் செய்து, பின்னர் சுடுகாட்டில் எரிப்பதற்காக கொண்டு சென்றனர். அங்கும் அனைத்து சம்பிரதாயங்களும் முடித்து கொள்ளி வைக்கும் நேரத்தல் ஹசாங்கர் திடீரென சிதையில் இருந்து எழுந்தார்.

இதனை பார்த்த உறவினர்கள் மற்றும் வெட்டியான் உள்பட அனைவரும் அலறி அடித்து ஓடினர். பின்னர் அவர் நான் சாகவில்லை உயிரோடுதான் இருக்கிறேன் என கூறியதும் பின்னர் உறவினர்கள் அருகில் பீதியுடனே வந்தனர். அவர்களிடம் பசிக்கிறது எதாவது இருந்தால் கொடுங்கள் என்றார்.

உறவினர்கள் வாழைப்பழத்தை சிதையில் படுத்தவாறே சாப்பிட்டார். பின்னர் அவரை வீட்டுக்கு அழைத்து சென்று மீண்டும் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பின் மீண்டும் திடகாரத்திரமாக உள்ளதாக ஹசாங்கரின் உறவினர்கள் தெரிவித்து உள்ளர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.