09/08/2018

இந்தியாவில் வாழ்ந்த கொடூர சமூகம் - தக்கர்கள்...


ஆங்கிலேயர்கள் காலத்தில் ஆங்கிலேயர்களையே வியப்பில் ஆற்றிய ஒரு சமூகம் தான் தக்கர்கள்.

இவர்களது பூர்வீகம் எது எதையோ எழுதி வைத்துள்ளது வரலாறு.

ஏறக்குறைய எல்லாமுமே தவறானது.

இந்த தக்கர்கள் இந்தியா முழுக்க பரவி கிடந்தார்கள்.

அந்த காலத்துல வழிப்போக்கர்கள் செல்வந்தர்கள் ஜமீன்கள் சிப்பாய்கள் ஏன் அரசபிரதினிதிகள் உட்பட  எல்லோரும் நெடுந்தூர கால்நடை பயணத்தில் திடீரென காணாமல் போய்விடுகிறார்கள்.

இது எங்கோ சில அல்ல பல்லாயிரக்கணக்கானவர்கள் இப்படி திடீரென மாயமாக மறைந்து விடுவார்கள் அவர்கள் பற்றிய குறிப்போ தடமோ எதுவுமே இருக்காது .

பல ஆண்டுகளாகவும் அரசாங்க கச்சேரியில் (காவல்நிலையத்தில்)
பிராது (புகார்) குவிந்த வண்ணம் உள்ளது. .

மூலையை கசக்கி கண்டுபிடிக்க முயர்சி செய்தாலும் இவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. .

ஒருவேளை இறந்து போனால் கூட உடல் கிடைக்க வேண்டுமே.

இப்படி பல வருட குழப்பத்திற்கு காரணம் இந்த தக்கர் என்று சொல்லக்கூடிய கொடூர கொள்ளை கூட்டம் தான்.

ஆம் தக்கர்கள் என்பது கயிற்றை தலையில் வீசி சுருக்கு கயிறு கட்டி சாகடித்து ஆபரணங்களை கொள்ளையடித்துக்கொண்டு ஓடும் கூட்டம் தான். .

1800 களிலும் அதற்கு முன்பும் பின்பும் இந்தியர்களையும் ஆங்கிலேயர்களையும் கதரவிட்ட தக்கர்கள் பற்றி யாருக்குமே தெரியாது என்பது தான் பெரிய விஷயம்.

காரணம் தக்கர்களுக்குள் தலைவர் மட்டுமே முடிவெடுக்கும் அதிகாரம் பெற்றவர் அந்த அந்த பகுதி தக்கர்கள் அந்த ஏரியா ஜமீன்களின் மறைமுக கட்டுப்பாட்டில் இருப்பர்.

கொள்ளையில் ஒரு பங்கு ஜமீனுக்கும் போகும்...

தலைவர் ஒருவர் மட்டும் என்பது அந்த அந்த குழுவில் மட்டுமே.

தக்கர்கள் என்பவர் ஒரே இடத்தில் கூட்டமாக வாழ்பவர்கள் அல்ல மக்களோடு மக்களாக இருப்பர்.

தம் சக தககர்களை அடையாளம் கண்டு கொள்ள சங்கேத குறியீடுகளை கொண்டு அடையாளம் கண்டு கொள்வார்கள். ..

இவர்களது கடவுள் காளி என்பார்கள்.
நரபலி பூஜை எல்லாம் உண்டு..

எப்படி மாட்டாமல் தப்பிப்பார்கள் ?
யாரையெல்லாம் கொலைசெய்ய மாட்டார்கள்?

பயணிகளோடு பயணிகளாக வழியில் கலந்துக்கொண்டு சிரித்து பேசி உண்டு மகிழ்ந்து அன்பளிப்புகளை பரிமாறி முழு நம்பிக்கை பெறும் அளவிற்கு பழகுவார்கள்.

அவர்களுக்கான திட்டமிடல் முன்கூட்டியே இருக்கும் அந்த இடம் வந்ததும் திடீரென அரக்கர்கள் போல மாறி சப்தம் இடுவார்கள் குலை நடுங்கும் சப்தமும் டர்பனை (முண்டாசை) அவிழ்த்து முழுமையாக அவர்களது தோற்றமும் பார்பவர்களை கதிகலங்க வைக்கும் சிறுவர்களை அப்புறப்படுத்தப்படும்..

தலையில் உள்ள முண்டாசை முறுக்கி தொண்டைகுழியில் தலையிலிருந்து வீசி நெறித்து கொள்வார்கள் அவ்வளவுதான் தொப் தொப்பென்று பிணங்கள் விழும். .

எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு உடலில் உள்ள ஆடைகளை முதற்கொண்டு கலட்டி விட்டு ஏற்கனவே தோண்டி வைத்துள்ள பாதாள சுரங்கத்தில் உடலை வீசிவிடுவார்கள். ..

இது அவ்வளவும் கன நிமிடங்களில் நடக்கும்.

இன்னும் இது  சம்பந்தமான
விஷயங்கள் உண்டு.

பிரிதொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம்..

தக்கர்கள் மொத்தமாக கொலை செய்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.