11/08/2018

திமுக வின் திராவிட பகுத்தறிவு...


இன்று ஆடி அமாவாசை. இறந்தவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் முக்கிய  நாள். குளம் கண்ட இடங்களில் எல்லாம் மக்கள் தங்கள்  முன்னோர்களுக்கு இன்று காலை முதல்  நேர்த்திக்கடன் செய்து  வருகிறார்கள். கருணாநிதி இறந்த நான்கு நாளில் இப்படி  ஒரு தர்ப்பண நாள் வந்து விட்டதால், கருணாநிதிக்கும்  தர்ப்பணம் கொடுத்தார்கள். அதிகாலையில் கோபாலபுரம் வீட்டில் வெகு விமரிசையாக பட்சணங்கள் செய்து அப்பனுக்குப் படைத்தார்கள்.

இரண்டு பிராமணர்களை அழைத்து எந்த குறைவுமில்லாமல் வெகு நேர்த்தியாக இந்த தர்ப்பணம் செய்யப்பட்டது. அதை புகைப்படக்காரர் புகைப்படம் எடுக்க முனைந்தபோது, பிராமணர்களை மட்டும் புகைப்படத்தில் இடம்பெறாமல் இருக்க தள்ளி இருக்க சொல்லி விட்டார்கள். கேட்டால் இவர்களின் பகுத்தறிவு படமாகி விடக்கூடாதாம். பிராமணர்கள் படத்தில் இருக்க வேண்டாமாம். ஆனால் அவர்கள் செய்துகொடுத்து சாங்கியங்கள் மட்டும் படத்தில் இருக்கலாமாம். அவற்றை திராவிடர்கள் செய்ததாக நினைத்துக் கொள்ள வேண்டுமாம். திராவிடர்கள் செய்கிற சாங்கியம் பகுத்தறிவில் வருமாம். தமிழன் என்றால் வந்துவிடும் பார்ப்பான், திராவிடன் என்றால் வர மாட்டானாம். அதுபோல நேரில் வரும் பிராமணன் புகைப்படத்தில் வர மாட்டானாம்.

என்னே பகுத்தறிவு... என்னே சுயமரியாதை..என்னே தன்மானம்... புல்லரிக்குதடா கொய்யால...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.