25/09/2018

இந்திய பாதுகாப்பு துறையில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழல் பாஜக மோடியின் ரஃபேல் ஒப்பந்தம் - உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் குற்றச்சாட்டு...


இந்திய பாதுகாப்பு துறையில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழல் ரஃபேல் ஒப்பந்தம் என்று உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்றம்சாட்டியிருக்கிறார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக இந்திய சட்ட விதிகள் எதுவும் பின்பற்றபடவில்லை என்றார். பிரதமர் மோடிக்கு ஏதோ ஒரு வகையில் அனில் அம்பானி சேவை செய்து வருவதாகவும், அதனால் தான் இந்த ஒப்பந்தம் அவரது நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

ஒப்பந்தம் மூலம் அனில் அம்பானியின் நிறுவனம் 20 ஆயிரம் கோடி லாபம் பெறும் என்று அவர் கூறினார். ரஃபேல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்த பிரசாந்த் பூஷன், இந்த ஊழல் குறித்து நாடாளுமன்ற குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.