25/09/2018

நடிகை நிக்கி கல்ராணியை பார்க்க அலைமோதிய ரசிகர்கள்.. போலீசார் தடியடி...


திருப்பூர் குமரன் சாலையில் புதிதாக செல்போன் கடை ஒன்று நேற்று திறக்கப்பட்டது. நிக்கி கல்ராணி பங்கேற்று கடையை திறந்து வைத்தார். முன்னதாக இது தொடர்பாக மீடியாக்களில் தொடர்ந்து விளம்பரம் செய்யப்பட்டு வந்தது.

 999 ரூபாய் செல்போன் முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு 100 ரூபாய்க்கும், முதல் 200 வாடிக்கையாளர்களுக்கு 200 ரூபாய் விலையில் வழங்கப்படும் என்று கவர்ச்சிகர திட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

கவர்ச்சி மழை கவர்ச்சிகர திட்ட பலனுடன், கவர்ச்சி நடிகை நிக்கி கல்ராணியையும் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் ரசிகர்கள் கூட்டம் முற்றுகையிட்டது. நிக்கி கல்ராணி உடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதில் ரசிகர்கள் மட்டுமின்றி கடை ஊழியர்களும் ஆர்வம் காட்டினர். தடியடி இதையடுத்து அங்கு பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நிலைமை கட்டு மீறிப் போனதால் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதன்பிறகு செல்போன் ஷோரூமை நிக்கி கல்ராணி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

கோவை இதன் பிறகு கோவையிலும் அதே செல்போன் ஷோரூமின் மற்றொரு கிளையையும் நிக்கி கல்ராணி துவக்கி வைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.