25/09/2018

காலம்தாழ்த்தி நாம் கண் விழிக்கின்றோம்...


மண்ணிருந்தும் தம் மண்ணை இழந்த மக்களான தமிழ் மக்கள், விழியிழந்து வழியிழந்து நாடோடி இனமாகக் கெட்டழிந்து வருவதை பார்க்கின்றோம்..

பெயருக்கொரு தமிழ்நாடு..

ஆனால் அங்குத் தமிழரிடம் ஆட்சியையும் அரசும் கொற்றமும் கொடியும் நிலமும் கடலும் வானமும் இல்லை..

தமிழனின் மானத்தை மறைக்க உதவிய நான்கு முழத்துண்டும் பரி போன கதையாய், தாய்த் தமிழகமே இன்று வேலியில்லா நிலமாகி, வாசலில்லா வீடாகி, வந்தாரை மட்டுமே வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

தமிழகம் இன்னொரு பாசுனியவாகக் கூடிய கேடு நம்மைப் பேரிருளாய்ச் சூழ்ந்துவருகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.