29/10/2018

எப்பவும் நாங்க தனித்துத்தான் போட்டியிடுவோம். யாருக்கு தலையாவோ வாலாவோ இருக்க மாட்டோம். யாரோடும் கூட்டணி கெடையாது - சீமான்...


இத கேட்கும்போது பயங்கர உணர்ச்சி வரும். ஆகா சீமானிசம் என பொங்கும். ஆனா கொஞ்சம் யோசிச்சா, மலர்ந்து வரும் தமிழ்த்தேசிய இளைஞர்களை எப்படி செல்லாக்காசாக்கும் திட்டம் என தெரியும்.

சீமான் இந்தியாவை எதிர்த்து கொரில்லா யுத்தம் நடத்தினால் சிறு எண்ணிக்கை ஆட்களே போதும். நடப்பது ஓட்டரசியல். இங்கே 45 சதம் வாக்கு வாங்கினாலே வாழ முடியும்.

சீமான் ஒரு சத வாக்கை வைத்துக்கொண்டு தனித்து நிற்போம் , இறங்கி அடிப்போம் என்பதன் பின்னணியில்,

ஈழத்தில் பிரபாகரனை தனிமைப்படுத்தி அழித்தொழித்தது போல், தமிழ்நாட்டிலும் தமிழ்த்தேசிய இளைஞர்களை பிற கட்சிகளுடன் இணைந்து வெல்லாமல், தனிமைப்படுத்தி ஓட்டரசியலிலும் அழித்தொழிக்கும் திட்டமே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.