06/12/2018

கள்ள காதலனுடன் தகராறு: 3 வயது குழந்தையை கொன்ற கொடூர தாய்...


 கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பரளி என்னும் கிராமத்தில் வசித்து வருபவர் ரம்யா (24). இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் திருச்சி மாவட்டம் கொழக்குடி பகுதியை சேர்ந்த தங்கதுரை என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு  வேத வர்ஷினி என்ற 3 வயது மகள் இருந்தார்.

இந்நிலையில் ரம்யா திருமணமாகியும், தனது திருட்டுக்காதலனுடன் தொடர்பில் இருந்ததால், கணவனை வெறுத்து காதலன் மணிமாறன் உடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இவர்களுக்கு பிறந்த குழந்தைதான் வேதா வர்சினி.

இந்நிலையில், ரம்யாவுக்கும் காதலன் மணிமாறனுக்கு ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் மனமுடைந்த ரம்யா, இன்று தனது மகள் வேதா வர்சினியை கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொலை செய்துவிட்டு, மண்ணெண்ணெய் குடித்து தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் ரம்யாவை மீட் டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பெற்ற தாயே குழந்தையை கொன்ற விபரீதம் இப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.