06/12/2018

மனம் என்பது எண்ணங்களின் பதிவு...


பதிவுகளை சேர்த்து வைக்கும் மனதிற்கு கொள்ளளவு உண்டு. அதனாலையே இயற்கை நாள்ப்பட்ட அல்லது தேவையற்ற பதிவுகளை அழித்துவிடுகிறது அதுவே மறதி.

ஆக தேவையானவற்றை நிரப்பவே போதிய இடமில்லாத போது தேவையற்றவையை சுமப்பது அறிவார்ந்த செயலா என நாம் தான் முடிவு செய்யவேண்டும்.

தமிழில் நாம் அறிந்துக்கொள்ளவே இப்பிறப்பு போதாதென்றிருக்க தமிழே நமக்கு போதும்  போதுமென்றிருக்க  எத்துனை தத்துவம் இறக்குமதி செய்யப்படுகிறது.

நீதி சமயம் மெய்ஞானம் வாழ்வியல் உளவியல் அரசியல் பகுத்தறிவு சமூகநீதி பெண்ணியம் பேசும் சோசியலிசம் மார்க்சியம் காந்தியம் பெரியாரியம் அம்பேத்கரியம் இந்துத்துவம் கிறித்தவம் இசுலாமியம் பௌத்தம் சமணம் இன்னும் எத்தனை ?

தமிழ்நெறி சொல்லாததை இங்கு எவரும் இதுவரை சொன்னதுமில்லை இனி சொல்லப் போவதுமில்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.