03/12/2018

சாதியில்லையென முதலில் கூறியவர்கள் சித்தர்கள்...


திருமந்திரம் - ஒன்றே குலம். ஒருவனே தேவன்.

ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று முதலில் சொன்னவர் திருமூலர்.

சாதியும், மதமும், தீண்டாமையும் எதிர்த்து ஒரே குலம் என்றார்...

இப்படி சில புரட்சிகரமான கருத்துகளை சொன்னதால், திருமந்திரம் பல காலமாய் இருட்டடிப்பு செய்யப்பட்டு இருந்தது.

"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே
சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே "
-திருமந்திரம்(திருமூலர்)

ஒன்றே குலமும் = ஒன்றே குலம். உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, உயர்ந்த மதம், தாழ்ந்த மதம் என்று ஒன்றும் கிடையாது.... எல்லோரும் ஒரே குலம்.

ஒருவனே தேவனும் = கடவுள் ஒருவன் தான். இத்தனை கடவுள்கள் கிடையாது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.