06/05/2017

ஆகாயத்தில் ஒரு ஒளி - 61...


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்க தரிசனத்தில் இன்று நாம் அறிந்து கொள்ளும் தீர்க்க தரிசனப் பகுதி 61-ம் பகுதியாகும். மெய்பட பல உண்மைகளை அறிவிக்கும் தொடராக இந்த ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற தீர்க்க தரிசனத் தொடர் வெளிவந்து கொண்டுள்ளது.

இதுவரை வெளியிடப்பட்ட, இனி  வெளியாகும்  அனைத்து தீர்க்க தரிசனங்களும், இவ்வுலகில் செயல்படும் காலம் தற்போது துவங்கி விட்டன என்றும், இனிதான் ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற இந்த தீர்க்க தரிசனப் பகுதிகளின் மீது உலக மக்களின் கவனம் ஈர்க்கப்படும் என்றும், பல சமூக ஆர்வலர்கள் இந்த பகுதியினை தாமாகவே முன்வந்து அவரவர் தாய்மொழியில் மொழிபெயர்த்து வெளியிடுவார்கள் என்று 61-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.

அண்டம், பிண்டம், கண்டம் என்பவை சொற்களின் மகத்துவத்தை தனக்கே கொண்ட பிரபஞ்ச கோட்பாடுகளாகும். அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்றும், அந்த பிண்டத்தில் உள்ள இரகசியங்கள் யாவும் கண்டம் எனும் இயக்க விதியை பொறுத்தே மனித சமுதாயத்தின் வாழ்நாளை அவைகள் தீர்மானிக்கின்றன என்ற இரகசியத்தை 61-ம் தீர்க்க தரிசனத்தில் ஒரு குறிப்பு தெரிவிக்கின்றது.


மேற்கண்ட தீர்க்க தரிசனக் குறிப்பின்படி பூமிக்கான விதி ஏற்கனவே எழுதப்பட்ட ஒன்று என்றும், ஆனால் வரும் சத்திய யுகத்திற்காக பூமியின் வாழ்நாள் காலம் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்றும் தீர்க்க தரிசனக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே புராணங்களிலும், வேத சாஸ்திரங்களிலும் வரையறுத்து கூறப்பட்டுள்ள நான்கு யுகங்களுக்கான வருட கணக்கின் மதிப்பு தற்போது வரும் 4 யுகங்களுக்கு இவைகள் பொருந்தாது என்று 61-ம் தீர்க்க தரிசனக் கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.

மனிதன் வாழப்பிறந்தவன், அவன் வாழும் இப்பூமியும் நிலைத்திருக்க பிரபஞ்சக் கோட்பாடுகள் இறைவனால் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அண்டத்தின் இயக்கமே மனித இயக்கம். மனிதனின் மன மாற்றமே அண்டத்தின் முழு மாற்றம் ஆகும். ஆகையால் மனித குலத்தில் ஏற்பட்ட பல மாறுதல்கள் தற்போதைய அண்டத்தில் பெரும் மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்துவதாக இருப்பதாக 61-ம் தீர்க்க தரிசனக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

அண்டத்தின் முழுமாற்றம் பூமியில் பெரும் சோதனைகளை உருவாக்கும் காலமாக அமைந்துவிடும் என்றும், இதனை தடுக்க இவ்வுலகத்தை படைத்த கடவுளே இப்பூமிக்கு வந்தால் மட்டுமே அது தடுக்க முடியும் என்று 61-ம் தீர்க்க தரிசனக் கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் தற்போது வந்து கொண்டுள்ள சத்தியயுகத்திற்காக இப்பூமி தனது அழிவிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள அன்னை ஆதிசக்தியின் வருகைக்காக காத்துக் கொண்டுள்ளது என்றும், ஆகையால் அன்னை ஆதிசக்தியானவர் இப்பூமியில் கால் ஊன்றி, கோல் ஏந்தி ஆட்சி செய்திட அவரின் உப தேவதைகளும், பிரபஞ்சத்தின் புனிதர்களும் இந்த பூமியை நோக்கி வர துவங்கி விட்டார்கள் என்று 61-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

இதனால் பூமியெங்கும் பல அழிவுச்சம்பவங்கள் துவங்கும் காலமாக தற்போது சூழ்நிலைகள் அமைய உள்ளதாகவும், அதனை தடுக்கும் கடவுளின் செயல்களும் தற்போது நடைபெறும் என்றும், அதனை மக்கள் நேரிடையாக காணும் காலமாக இக்காலம் இருக்கும் என்று 61-ம் தீர்க்க தரிசனம் மேலும் விபரமாக எடுத்துக் கூறுகின்றது.


தென் அமெரிக்கா, வட அமெரிக்கா இவை இரண்டின் பூமி அடித்தட்டுகள் தற்போது நகரத் துவங்கும் காலம் துவங்கி விட்டன என்றும், தென் ஆசியாவில் இதனால் பல மோசமான பூமி சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் துவங்க ஆரம்பித்து விடும் என்றும், இதனால் மக்கள் சமுதாயம் விழிப்புடன் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என்று 61-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

மனித உறவுகள் என்பவை மகத்தான ஒரு சக்தியின் மறைமுக இணைப்பு என்றும், இந்த உறவை இறைவனே மக்களிடத்தில் சூட்சமாக ஏற்படுத்தி உள்ளார் என்றும், உறவுகளுக்குள் ஏற்படும் விரோதங்கள் கூட உலகை உலுக்கிவிடும் என்று கடவுள் கோட்பாடுகள் தெரிவிப்பதாக 61-ம் தீர்க்க தரிசனக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற இந்த 61-ம் தொடர் வெளியாகும் சமயத்தில் இந்திய துணைக்கண்டத்தில் ஒரு பூமிசம்பந்தப்பட்ட நிகழ்வு கட்டாயம் நடக்கும் என்று கடவுள் கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. இதனைக் கொண்டு இனி தீர்க்க தரிசனங்கள் ஒவ்வொன்றாக நடக்க துவங்கும் என்பதை மக்கள் சமூகம் அறிந்து கொள்ளலாம் என்று 61-ம் தீர்க்க தரிசனம் மெய்பட கூறுகிறது.


பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் மறைந்து போன சுமேரியா நாகரிகத்தின் அடுத்த பகுதி பூமியிலிருந்து மேலே வரும் ஒரு அற்புதம் தற்போது நடக்க உள்ளதாகவும், அங்கு காணப்படும் பல குறிப்புகளில் தற்போது வர உள்ள சத்திய யுகத்தைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றிருக்கும் என்று 61-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தெரிவிக்கின்றது.

சத்திய யுகத்தின் புனர்ஜென்ம கணக்கு தற்போது துவங்கி விட்டது என்றும், இனி மக்கள் தங்களுக்குள் மரண அச்சத்தை கண்டு மனதளவில் மாற்றம் அடைவார்கள் என்றும், அதே சமயத்தில் அன்னை ஆதிசக்தியின் ஊழித்தாண்டவம் ஒன்று நடைபெற உள்ளதாக 61-ம் தீர்க்க தரிசனம் மெய்பட கூறுகிறது.


ஆழியின் பேரலைக்குள் அன்னை ஆவேசமாக ஆடும் ஊழித்தாண்டவத்தால் பல தேசங்களில் சுனாமி எனும் பேரலை தாக்க உள்ளதாக 61-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது. மக்களிடத்தில் ஏற்படும் மன மாற்றமே இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்கப்படும் என்ற ஒரு குறிப்பையும் 61-ம் தீர்க்க தரிசனம் முன் வைக்கின்றது...

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.