06/05/2017

குகை மர்மங்கள்...


நாம் பொதுவாக அமானுஷ்ய இடங்களையும், நிகழ்வுகளையும் தேடி அலைவதிலும் தெரிந்து கொள்ள முயல்வதிலும் வியப்பில்லை. பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள அண்ட வெளியில் ஆராய்கிறோம், பல கிலோ மீட்டர் அடியில் உள்ள கடலுக்கடியில் ஆராய்கிறோம்.

ஆனால் நம் அருகிலேயே நிலத்தில், மலையடிவாரத்தில், மலையில், பாறைகளில் உள்ள குகைகளை விட்டு விடுகிறோம், ஆராய்கிறோம் எனினும் முழுவதுமாக ஆராயபடவில்லை என்பதே உண்மை.

எந்த ஒரு இடத்தை பார்த்ததும் நம் உள் மனதில் ஒரு தயக்கம் கலந்த மர்மமான பயம் வருகிறதோ அது தான் அமானுஷ்ய பகுதி. அந்த வகையில் குகைகளை குறைத்து மதிப்பிட இயலாது. கற்பனைக்கு எட்டாத, எண்ணிலடங்காத மர்மங்கள் அதில் காணப்படுகிறது. நம் ஊர் குகைகளில் உள்ள அதிசயஙகள் நம்மை ஆச்சரியபடுத்தும் அளவு உள்ளது.


பொதுவாக குகைகள் போர் காலங்களிலோ அல்லது அவசர ஆபத்து, விபத்து காலங்களில் சுரங்கங்களின் வழியாக தப்பி செல்ல உதவும் பாதையாக கையாளப்படுவது நமக்கு தெரியும்.

ஆனால் அதை விட வேறு முக்கியமான ஒரு விடயம் அதில் உள்ளது. நமது சித்தர்கள் ஏன் பெரும்பாலும் குகைகளில் வசிக்கிறார்கள் அல்லது குகைகளில் தவம் செய்கிறார்கள் என்று யோசித்ததுண்டா?

குகைகளில் உள்ள கல் சுவர் குளிர்ச்சியை (மன அமைதி மற்றும் நேர்மறை எண்ணங்களுக்கு வழிவகுக்கும்) தரும், வன விலங்குகளிடமிருந்து பாதுகாப்பு, தனிமை என பல காரணங்கள் இருப்பினும் இன்றியமையாத காரணம் உள்ளது.

யாதெனில் சித்தர்கள் இயற்கையை கடந்த (supernatural) சக்திகள் உடையவர்கள் அவர்கள் வேற்று உலகை தொடர்பு கொள்ளவும் அங்கிருந்து பூமிக்கு வரும் பாதையாக குகைகளை பயன்படுத்துகின்றனர்.


அது ஏன் நிலத்தின் மேற்பகுதியை பயன்படுத்த வில்லை எனில். நிலத்தின் அடியில் அல்லது குகைகளில் தான் பிரபஞ்ச இணைப்பு (wormhole) அதாவது வெவ்வேறு பிரபஞ்சங்களுக்கு இதன் வழியாக ஒரு நொடியில் செல்லலாம்.

அந்த wormhole கள் நிலத்திற்கு கீழே திறப்பனவாக இருக்கலாம். இதை தான் அவர்கள் கண்டறிந்து பயன்படுத்தி வேற்றுலக தொடர்பை கொண்டுள்ளனர்.

ஆனால் நாம் அந்த பிரபஞ்ச இணைப்பை அறிவதில் சிக்கல் உள்ளது.

குகைகளின் உள்ளே உள்ளவை மிகப்பெரும் சுரங்க வழிகளும், மர கிளை போன்ற அமைப்புடன் அதிக எண்ணிக்கையிலும் குகைகள் காணப்படும். இதில் நாம் பிரபஞ்ச இணைப்பை கண்டறியும் போது தான் மிகப் பெரிய மர்மங்களுக்கு விடை கிடைக்கும்.

இதை பற்றி முழுவதுமாக ஆயாய்ந்து தெரிய முற்படும் போதே விடை கிடைக்கும்.


அது மட்டும் அல்லாது இன்றும் பல பகுதிகளில் பார்த்ததாகக் கருதப்படும் சித்திர குள்ளர்களும் பூமிக்கு அடியில் தான் வசிக்கிறார்கள்.

அவர்களும் அவ்வப்போது குகைகளின் வழியாகவே வெளிப்படுகிறார்கள்.

பூமிக்கு அடியில் இன்னொரு பூமி போன்றே மலை, காற்று, நீர் உயிரினங்கள் இருக்கின்றன என்பது தனிக்கதை { Hollow earth }. இது போதாது என்று வேற்றுகிரக வாசிகளும் குகைகளில்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.