06/05/2017

ஆகாயத்தில் ஒரு ஒளி - 63...


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்க தரிசனத்தில் இன்று நாம் காணும் பகுதி 63-ம் தீர்க்க தரிசன பகுதியாகும். இதில் இடம்பெறும் குறிப்புகள் அன்னை ஆதிசக்தியை பற்றிய முக்கிய குறிப்புகளாகும்.

ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற இப்பகுதியில் 63-ம் தீர்க்க தரிசனம் இவ்வுலகில் சக்தியின் பீடங்கள் 51 என்றும், அட்சரங்கள் 51 என்றும் கூறுகிறது. இந்த 51 சக்தி பீடங்கள் அனைத்தும் இவ்வுலகின் தன்மையிலிருந்து மாறுபாடு அடைய உள்ளதாகவும், இனி 51 சக்திகளின் மகா தொகுப்பாக ஆதிசக்தியின் அவதாரக்கோவில் விளங்கிடும் என்றும், அதனாலேயே சேலத்தை சைலமாக மாற்றும் நிகழ்வு நடக்கும் என்று 63-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.


மகா அவதார் பாபாஜியின் பிரவேசம் இமயத்தைவிட்டு நமது சேலத்தில் இனி தென்படும் அற்புத நிகழ்வுகள் நடக்க உள்ளதாகவும், அவரின் வருகை அன்னையை வரவேற்கவே என்றும், அவரை பின் தொடரும் ஆன்மீகவாதிகள் யாவரும் இனி கைலாயத்தை விட்டு சைலத்தை நோக்கி வருவார்கள் என்றும், இந்த நிகழ்வு கைலாயமான இமயமலை பூமிக்குள் அமில (புதைய) உள்ளதாக இருக்கும் என்று 63-ம் தீர்க்க தரிசனம் ஒரு அரிய குறிப்பை மெய்பட கூறுகிறது. இதுகூட அபசகுணம் அன்று என்றும், இப்பூமி அடுத்த 1000 வருடங்களுக்காக (தெய்வீக ஆண்டு) மாற்றத்தை காண உள்ளதற்கான முக்கிய அறிகுறியாக மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று 63-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு விளக்கத்தை தருகின்றது.


அன்னை ஆதிசக்தியின் பிரவேசமான இந்த சத்திய யுகம் மிக, மிக அற்புதமான ஒரு யுகம் என்றும் தர்மபிரபுக்களும், மகான்களும், புனிதர்களும் வாழும் ஒரு யுகமாக காட்சி அளிக்க போவதாக இருக்கும் என 63-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது. மீண்டும் இப்பூமியில் பஞ்ச பாண்டவர்கள் அவதரிப்பார்கள் என்றும், அவர்கள் காலத்தில் அவர்கள் சரியாக வாழாமல் தர்மத்திற்காக காடு, மலையாக அலைந்தார்கள் என்றும்,  தற்போது அவர்கள் சத்திய யுகத்தில் பிறவி கண்டு புண்ணியவான்களாகவும், தருமத்தை நிலைநாட்டும் ஆட்சியாளர்களாகவும் வாழ்ந்து காட்டுவார்கள் என்று 63-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

அன்னை ஆதிசக்தியின் சத்தியயுகப் பிரவேச இரகசியங்களை அன்னையின் ஆசிபெற்ற ஒரு யோகா அமைப்பு பாதுகாத்து வருகிறது என்றும், அந்த அமைப்பே இவ்வுலகில் அன்னையின் மகிமைகளை மக்கள் அறியும்படி செய்யும் என்றும், அங்குள்ள மக்களாலே பல மறைந்த புனித யோக இரகசியங்கள் அன்னை மூலம் வெளிப்படுத்தப்படும் என்று 63-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.

சேலம் மாநகரில் ஒரே இடத்தில் ஒரே தெய்வம் இரு உருவமாக காட்சி அளித்து வருவது புதிதல்ல என்றும், ஒன்று அன்னை ஆதிசக்தியின் கோவிலுக்கு எல்லையம்மன் என்றும், ஒன்று சேலம் மாநகரத்தின் எல்லையம்மன் என்றும் ஒரு குறிப்பை 63-ம் தீர்க்க தரிசனம் தெரிவிக்கின்றது.

சேலம் மாநகரில் இனி தெய்வீக சங்கல்பங்கள் நிறைய நடக்கும் என்றும், அதற்கு முன் பல கோவில்களில் சர்ச்சைகளும், புரியாத புதிர்களும் நடக்கும் என்றும், இதுகூட இந்த மாநகரம் இறைத்தன்மையில் ஒரு முன்னேற்றத்தை மக்கள் சமுதாயம் காண வேண்டும் என்பதற்காகவே அமைய உள்ளதாக 63-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.


சேலத்தின் மையப்பகுதியில் திடீரென்று ஒரு பள்ளம் உருவாகும் என்றும், அது நிகழ்ந்த 60-ம் நாளில் ஒரு பூமி அதிர்வு உருவாகும் என்றும், அப்பொழுது மக்களுக்கு இனம் புரியாத ஒரு இன்ப அனுபவம் தெய்வீகமாக ஏற்படும் என்று மற்றொரு குறிப்பு தெரிவிக்கின்றது.

சேலம் இனி உலகம் முழுவதும் அறிந்து கொள்ளும் ஒரு முக்கிய இடமாக (அ) ஊராக கருதப்படும் என்றும், மக்கள் சாதிச் சண்டைகளை மறந்து மக்கள் சமூகமாக இணையும் பல தெய்வீக ஆச்சர்யங்கள் நடக்க உள்ளதாக 63-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.


சேலம் சித்தர் கோவிலில் ஒரு அதிசய சம்பவம் சித்தர் ஒருவரால் நிகழ உள்ளதாகவும், அங்குள்ள ஒரு பழமையான இறை இரகசியம் வெளி உலகத்திற்கு இதனால் தெரிய வரும் என்று 63-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

அதிசயம் ஆனால் உண்மை என்ற வாசகம் மக்கள் மனதில் இனி நீங்கா இடத்தை அடைய உள்ளதாகவும் அதற்கு அன்னை ஆதிசக்தியின் யுகப்பிரவேசமே காரணமாக இருக்கும் என்றும் அன்னை ஆதிசக்தியை வரவேற்க செவ்வாடை தொண்டர்கள் காத்திருப்பார்கள் என்றும், அந்த செவ்வாடை தொண்டர்கள் நிறைந்த ஒரு இடத்தில் அன்னை ஆதிபராசக்தியின் அதிரடி மாற்றங்களும் நிகழ்வுகளும் தற்போது நிகழ உள்ளதாக 63-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கு வெளிப்படுத்துகின்றது.

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.