30/03/2018

சாதி இருக்கா.? இல்லையா.?


கொடுக்கப்பட்ட சலுகைகளை சரியாக பயன்படுத்தினால்.. மிகப்பெரிய உயரத்தை அடையலாம் என்று.. எந்த அரசியல்வாதியும் தன்னை நம்பும் தொண்டனுக்கு அறிவுறுத்துவதே இல்லை..

ஏன்னா அவனுக்கு அறிவே இல்லை.  அறிவு இருக்கிறத வெளியில காட்டினானா பொழப்பு போயிடும்.. அதனால அவன் உண்மையைப் பேசவே மாட்டான்.

படிக்கறப்பசங்கள பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி..
தாழ்த்தப்பட்டோர் மாணவர் விடுதி..

என்று பிரித்ததில் தான் தமிழகத்தின் சாதி அரசியலே அடங்கியிருக்கு..

சாதி இல்லாமல் எல்லோரும் வாழ முடியும்..

ஆனால் அரசியல் ஒரு நாள் கூட வாழாது..

எப்ப ஒரு கட்சி சிறுபான்மையினர் அணி,
தாழ்த்தப்பட்டோர் அணியினு மக்களைப் பிரிக்குதோ..

அப்பவே நீங்க உணர்ந்திருக்கனும் அரசியல் மக்களை ஒற்றமையா இருக்க விடாதுனு.

யானையெனும் மக்கள் பலத்தை
பொம்பள என்னும் அங்குசத்தக் காட்டியே
தலைவன் எனும் பாகன் ஏமாற்றி வருகிறான்.

பாகனை அடிச்சி விரட்டுங்க.. அப்பறம் அங்குசத்திற்கு வேலையே இருக்காது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.