05/04/2018

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3) சத்திய யுகம் பகுதி - 5...

நமது சத்திய யுகம் வருங்கால தீர்க்க தரிசனப் பகுதியில் இன்று நாம் காண இருக்கும் தீர்க்கதரிசனப் பகுதி 5-ம் பகுதியாகும். பல அரிய நடைமுறை குறிப்புகளை கொண்ட தீர்க்கதரிசனமாக இப்பகுதி இருக்கும் என்பதே சிறப்பு வாய்ந்த ஒரு செய்தியாகும்.


சத்திய யுகம் வருங்கால தீர்க்க தரிசனத்தின் 5-ம் பகுதியில் இன்று முதலாவதாக நாம் தெரிந்துகொள்ளும் தீர்க்கதரிசனம் என்னவெனில் தமிழ்நாட்டு மக்கள் பல குழப்பங்களுக்கும், துன்பங்களுக்கும் ஆளாக நேரிடும் என்றும், அதற்கான அரசியல் நிலவரங்களும், கல்விக் கொள்கைகளும், நீர் தன்மை ஆதாரங்களும். நடிகர்கள் பற்றியச் செய்திகளும் இதற்கு காரணமாக அமைய இருப்பதாகவும், தென்னிந்திய நடிகர் ஒருவரின் “அந்தரங்கம்“ ஒன்று தற்போது ஆதாரப்பூர்வமாக வெளியாகி மக்களிடையே பல குழப்பங்களை உருவாக்கும் சூழ்நிலை இருப்பதாக 5-ம் தீர்க்க தரிசனம் நமக்கு வெளிச்சமிட்டு காட்டுகின்றது.



தற்போது மன்னார் வளைகுடாவில் உருவாகும் “புயல்“ சின்னம் பலத்த வலுப்பெற்று பல சேதங்களை இந்தியா மற்றுமின்றி அதன் துணைக் கண்டங்கள் முழுவதும் ஏற்படுத்தும் என்றும், அப்பொழுது தமிழகத்தின் தென் மூலையில் உள்ள ஒரு கடல் சார்ந்த நிலப்பரப்பில் ஒரு சில வினோதங்கள் தென்பட இருப்பதாக 5-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.



கோவிலூர் மிகுந்த மதிப்புமிக்க ஊர் என்றும், அந்த ஊரில் கவலையில்லாத மனிதர்கள் வாழ்ந்த ஒரு காலக் கட்டத்தின் பொக்கிஷம் ஒன்று பூமியிலிருந்து வெளிப்படும் என்றும், அது காலத்தை கணக்கிடும் காலக் கணிதமாக அது இருக்கும் என்றும், அது தென்படும் சமயத்தில் சிவாலயம் ஒன்றில் அதிசயம் ஒன்று நடைபெறும் என 5-ம் தீர்க்கதரிசனம் இங்கு ஒரு சிறு குறிப்பை தருகின்றது.



ஸ்வர்ண லிங்கேஸ்வரரின் அற்புதம் ஒன்று தென் கைலாயம் அமைந்துள்ள மலையில் நடக்க இருப்பதாகவும், அங்கு மறுபிரவேசம் கண்ட அகத்திய மாமுனிவரின் ஆன்மா, ஒரு மனித உடலிருந்து பல உலகியல் செய்திகளை அறிவிக்க இருப்பதாகவும், இதனை தொடர்ந்து தமிழகத்தில் தெய்வீக சித்தர்களின் நடமாட்டங்களை இனி மக்கள் காணும் அதிசய நிகழ்வுகள் பல தொடர் நிகழ்வுகளாக நடக்க இருப்பதாக சத்திய யுக தீர்க்க தரிசனத்தின் 5-ம் பகுதி நமக்கு ஒரு முக்கிய குறிப்பை தெளிவுபட எடுத்துக் கூறுகிறது.


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஆயிரம்கால் மண்டபத்தில் அதிசயம் ஒன்று வெளிப்பட இருப்பதாகவும், இதனால் அம்மனின் திருவிளையாடல் ஒன்று தமிழகத்தில் விரைந்து நடக்கும் என 5-ம் தீர்க்க தரிசனப் பகுதி நமக்கு இங்கே சுட்டி காட்டுகின்றது.


வடதேசத்தில் நடைபெறும் பூமி அதிர்வானது ரிக்டர் அளவில் 7.8ஆக இருக்கும் என்றும், இதனால் பலத்த உயிர் சேதங்கள், பொருள் இழப்புகள் ஏற்பட இருப்பதாகவும் இதனை யாராலும் தடுக்க முடியாது என இறை தீர்க்கதரிசனங்கள் இங்கே தெரிவிக்கின்றன.


இறைமகன் இயேசுவின் வருகை உறுதி செய்யப்பட்டு விட்டது என்றும், இதனை உறுதி செய்யும்விதமாக உலகம் முழுவதும் ஆகாயத்தில் வினோதமான சப்தங்களை மக்கள் தொடர்ந்து கேட்க உள்ளனர் என்றும், இது “எக்காலயோசையாக“ இருக்கும்படி அமையும் என 5-ம் தீர்க்கதரிசனப் பகுதிகள் நமக்கு இங்கே தெரிவிக்கின்றன.

எக்காலயோசை என்பது பூமியின் மீது இறைவன் வழங்கும் நியாயத்தீர்ப்பிற்கு முன் வரும் எச்சரிக்கை ஓசையாகும் என்பது இதன் சிறப்பு ஆகும்.



சுமைதாங்கி அமைப்பில் அமைந்துள்ள கற்கள் நிறைந்த நிலப்பரப்பில் “பறக்கும் தட்டு“ ஒன்று இறங்கும் அதிசய நிகழ்வு தற்போது நடக்க இருப்பதாகவும், இதனை விஞ்ஞான உலகம் “உறுதி செய்து“ அறிக்கை ஒன்றை வெளியிடும் என்றும், இன்னும் ஒரிரு தினங்களில் உலகத்தின் தென்முனையில் உள்ள ஒரு பனிப் பிரதேசம் பூமிக்குள் அமிழும் நிகழ்வு ஒன்று அச்சமயத்தில் நடந்து மக்களை அச்சுறுத்தும் என்று சத்திய யுகத்தின் 5-ம் தீர்க்கதரிசனப் பகுதி நமக்கு உறுதிப்பட கூறுகிறது.


மதிப்புமிக்க ஒருவனால் இவ்வுலகில் ஒரு “வரைபடம்“ ஒன்று வெளியாகும் என்றும், அதில் உள்ள நிலப்பரப்பு ஒரு மிகுந்த ஆச்சர்யத்தை அளிக்கும் என்றும், அந்த நிலப்பரப்பை உலக மக்கள் அடையாளம் காணும் சமயத்தில், பூமியில் அதிசய தெய்வீக நிகழ்வு ஒன்று நடைபெற்று உலக மக்களையே ஆச்சர்யப்படுத்தும் என 5-ம் தீர்க்க தரிசனப் பகுதி இங்கே ஒரு குறிப்பை தருகின்றது.


ஸ்ரீ போகரின் வருகை உறுதி செய்யப்பட்டு விட்டது என்றும், அவரின் மறுபிரவேசம் வரும் திங்கள் அன்று ஒரு முருகனின் சந்நதியில் நடைபெறும் என்றும், இதனை மக்கள் பார்க்கவோ (அ) அறியவோ முடியாது என்றும், ஆனால் அவரின் பிரவேசம் நடைபெற்றதற்கு அடையாளமாக அந்த முருகன் சந்நதி அமைந்த ஊரில் மழையானது 7 மணி நேரம் தொடர்ந்து பெய்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் நிகழ்வு ஒன்று நடக்க இருப்பதாக 5-ம் தீர்க்க தரிசனப் பகுதி நமக்கு இங்கே சுட்டிக் காட்டுகின்றன.


ஒரு மலைப் பிரதேசத்தில் நடக்கும் பூமி பிளவானது பெரும் சேதங்களை ஏற்படுத்தும் என்றும், இது காஷ்மீரின் வட பகுதியில் தற்போது நடக்க இருப்பதாகவும், இதனால் இந்திய இராணுவம் செய்வது அறியாது நிற்கும் நிகழ்வு ஒன்று நடக்க இருப்பதாக தீர்க்கதரிசனச் செய்தி குறிப்புகள் தெரிவிக்கின்றன.


தற்போது மயிலாடுதுறையில் அதிசயம் ஒன்று நடைபெற இருப்பதாகவும், இது நடைபெறும் சமயத்தில் நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள “நாகேஸ்வர்“ சந்நதியில் மக்கள் பார்க்கும்படி ஒரு தெய்வீக நிகழ்வு நடக்கும் என்றும், இதனால் கடலோர மாவட்ட மக்கள் கடல் பயணத்தின் போது “தெய்வீக“ அதிசயம் ஒன்றை காண்பார்கள் என சத்திய யுகத்தின் 5-ம் தீர்க்க தரிசனப் பகுதி நமக்கு இங்கே சுட்டிக் காட்டுகின்றது.


மறைந்த முதல்வர் தமிழகத்தின் ஒரு மாபெரும் சக்தியாக இருந்தார் என்றும், இவரின் இறப்பினால் அந்த சக்தியானது தமிழகத்தை விட்டு விலகிவிட்டது என்று மக்கள் நினைக்கும் அளவிற்கு தமிழகத்தில் தற்போது அரசியலில் நிகழ்வுகள் அமைய இருப்பதாக 5-ம் தீர்க்கதரிசனப் பகுதியானது நமக்கு சுட்டிக் காட்டுகின்றது.



சிங்கப்பூரில் ஒரு இனக்கலவரம் உருவாகும் என்றும், இதில் சீனா தலையிடும் என்றும், அப்பொழுது இந்தியாவின் ஒரு மாநிலத்திலிருந்து திபெத்தின் புத்த லாமாக்கள் ஒரு செய்திக் குறிப்பை வெளியிடுவார்கள் என்றும், இச்செய்தி உலக மக்களையே திரும்பி பார்க்க வைக்கும் என சத்திய யுகத்தின் 5-ம் தீர்க்க தரிசனப் பகுதி ஒரு முக்கிய குறிப்பை இங்கே சுட்டிக் காட்டுகின்றது.


இந்த பூமியில் ஒரு சிறிய எரிகல் விழும் நிகழ்வு ஒன்று வரும் மாதத்தில் நடக்க இருப்பதாகவும், இந்த எரிகல்லின் ஆய்வு உலக விஞ்ஞானிகளை திகைக்க வைப்பதாக இருக்கும் என 5-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு அதிசய தகவலை இங்கே பதிவு செய்கிறது.


கும்பராசியில் பிறந்த ஒரு பெண்ணின் ஜாதகம் தற்போது தீவிரம் கொள்ளும் என்றும், அவரின் செய்திகள் உலகையே திரும்பி பார்க்க வைக்கும் என்றும், இச்செய்தி சில மாதங்களுக்கு மக்களிடையே ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தும் என 5-ம் தீர்க்கதரிசனப் பகுதி ஒரு முக்கிய செய்திக் குறிப்பை இங்கே சுட்டிக் காட்டுகின்றது.


இறைவன் வரும் அந்த இறுதி சபையில் உள்ளோரிடத்தில் இறைவனின் அற்புத விளையாட்டுகள் தற்போது துவங்கும் என்றும், அவைகள் யாவும் மக்களுக்கு நன்மை செய்யும் விதமான விளையாட்டுகளாக அமைய இருப்பதாகவும், இந்நிகழ்வின் வாயிலாக அந்த இறுதிசபையின் பெயர் இனி உலக மக்களுக்கு பகிரங்கமாக தெரிய வரும் என்றும்,  இறை சார்ந்த விளையாட்டுகள் இனி வரும் நாட்களில் தொடர் நிகழ்வாக நடக்கும் என்றும், “பிரபஞ்சம் வியக்கும் அதிசயம்“ என்ற தாரக மந்திர வார்த்தையானது உயிர்பெறும் என்றும், இந்த வார்த்தையை தாங்கிய இறைவனின் காலச் சக்கர யந்திரமானது இனி இவ்வுலகம் முழுவதும் மக்களால் அறியப்படும் என்று ஒரு முக்கிய நிகழ்வைப் பற்றி 5-ம் தீர்க்கதரிசனம் இங்கே நமக்கு தெரிவிக்கின்றது.


யோக மார்க்கங்கள் இனி உலகை வலம் வரும் சம்பவங்கள் யாவும் இந்தியாவிலிருந்து துவக்கம் பெறும் என்றும், அதற்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டம் ஒன்று தற்போது இயற்றப்படும் என்றும், இதனால் உலகில் ஆன்மீகம் செழித்து வளரும் என்றும், அச்சமயத்தில் உண்மைகள் யாவும் உறங்காது அது ஆகாயத்தில் வெளிச்சமாக ஒளி வீசும் என்றும், அதுவே சத்திய யுகத்திற்கான நற்கதவு திறந்து விட்டதற்கான அடையாளம் என்று சத்திய யுகத்தின் 5-ம் தீர்க்க தரிசனம் நமக்கு மெய்பட கூறுகிறது.
இந்த மெய்மைகளை காண நாம் அதுவரை காத்திருப்போம்.

குறிப்பு : இந்த வருங்கால தீர்க்க தரிசனத்தில் வெளிப்படுத்தப்படும் தேதிகள் மற்றும் வருடங்களை மட்டும் யாரும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

இது இறைவனின் நீயாத்தீர்ப்புகளின் படியே அமையும், ஆனால் செய்திக் குறிப்புகள் அனைத்துமே நடைபெறும்.

மேலும் இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல.

அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.