05/04/2018

காவேரி மேலாண்மை அமைக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து காந்தி சிலைக்கு மனுக்கொடுத்து நூதன போராட்டம்...


மணப்பாறையில்: காவேரி மேலாண்மையை அமைக்காமலும், உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமலும் செயல்படும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும், பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட், நியுட்ரினோ ஆகிய திட்டங்களை தடை செய்ய வலியுறுத்தியும் தமிழர் தேசிய முன்னணி கட்சியின் மாவட்ட செயலாளர் ம.உலகநாதன், தனி மனிதனாக  மாரியம்மன் கோவில் பகுதியில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி மணப்பாறை திருச்சி சாலையில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு மனு கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். தனி மனிதன் நூதன முறையில் போரட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.