05/04/2018

காவிரிக்காக வைகையில் கூடிய மண்ணின் மைந்தர்கள்....


ஸடெர்லைட் மற்றும் நீயூட்ரினோ திட்டங்களுக்கெதிராக  சிறுவ சிறுமியர் இட்ட கோஷங்கள் அரசியல்வாதிகளின் வேஷங்களை தோலுரித்தது...

மாலைவெயிலும் மனமிரங்கி தனலை குறைத்தது .. மதுரக்காரர்களின் மனதைரியத்தை பார்த்து....

வாழ்க்கையில் போராடிய  மக்கள் இன்று போராட்டமே வாழ்க்கையாக...

திரும்பிய திசையெல்லாம்  தீமைக்கெதிராக திரண்ட கூட்டம்...

இயக்கங்கள் வேறு....வேறு...
கோரிக்கைகள் ஒன்றே..

அரசிலும் இயக்கமும்  நமக்கு இச்சையே இல்லை ஆனால்...  எம்இனத்திற்கான புரட்சியில் இணைதில் இணக்கம் எதற்கு என்று இன்முகத்தோடு கலந்தோம்... இயன்ற கோஷங்களோடு நமது ஆதரவை பதிவு செய்தோம்..நண்பர்  இயக்குனர் லாரன்ஸ்ராம அவர்களின் கேஷங்கள் விண்ணை பிளந்தது... பயணமானோம்....

இன்ப அதிர்ச்சியாக ஆரம்பபள்ளியில் என்னுடன் படித்த ஆருயிர் தோழனை இருபதுவருடம் கழித்து இன்ஸபெக்டராக கண்டேன்..

தமிழின போராளியாக கோஷமிட்டு.... என்கையில் கோரிக்கை பதாகை குச்சி.... அவன் கையில்  லத்திக்குச்சி....

அன்புடன்
அபிசரவணன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.