21/06/2018

வாங்கோ வாங்கோ.. சுத்தமான காற்று ஹே.. தமிழ்நாடு ஹே விற்பனைக்கு ஹே...


நீரும் காற்றும் இனி பணத்துக்கு எனில்...நாய் பூனை கொக்கு மைனா..

எல்லாம் எங்கு போகும்..?
எந்த கடையில் வாங்கும்..?

மனிதர்களுக்கான உலகா.. இது..
க்கும். இலங்கை காட்டுக்குள் இருந்து கொண்டே... AC காற்று கேட்கும் என் சமூகத்திற்கு இதன் பயங்கரம் புரியவா போகிறது..?

வீட்டில் கிணறு இருந்தும் காசு கொடுத்து தண்ணீர் வாங்கி குடிக்கும் என் சமூகத்திற்கு தெரியாது..

மாடு கட்டி சூடடிக்க போதாது என்று யானை கட்டி சூடடித்த தமிழ்நாட்டில் ஒரு குடம் தண்ணீரின் விலை 10-30 ரூபாய் என்று..

30×3=90 ஒரு குடம் தண்ணீரின் விலை என்று..

எதும் பண்ண முடியாதுனாலும் தெரிஞ்சு வச்சுக்கங்க..

தூய காற்றும் விற்பனைக்காம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.