21/06/2018

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை : ஆட்சியர் தகவல்...


தூத்துக்குடி மாவட்டத்தில் 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் உத்திரவின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் (மாற்றுத்திறன் குறைந்தது 40சதவீதம்) எவரேனும் தமிழக அரசின் மூலம் மாதாந்திர உதவித் தொகை பெறவில்லை எனில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியரை அணுகி மாதாந்திர உதவித்தொகை வேண்டி மனு அளிக்கலாம்.

மனு அளிக்க செல்பவர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ (3) ஆகியவற்றுடன் சென்று மனு அளித்து பயன் பெற்றுக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.