29/07/2018

டிடிவி தினகரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு, அடையாறு துணை ஆணையர் விளக்கம்...


காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த புல்லட் பரிமளம் என்பவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அவரை டிடிவி தினகரன் அமமுக  வை விட்டு நீக்கியுள்ளார்.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் டிடிவி தினகரன் இல்லம் முன்பு கோஷம் எழுப்பிய புல்லட் பரிமளம் தனது ஓட்டுனர் சுப்பையா என்பவருடன் சேர்ந்த தனது காரை பெட்ரோல் ஊற்றி எரித்து, கற்களை கொண்டு தாக்கியுள்ளார்.

இதனால் பரிமளத்திற்கு சிறிய அளவில் தீக்காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஓட்டுனர் சுப்பையாவை பிடித்து விசாரணை செய்து வருகிறோம்
- துணை ஆணையர் செஷாங் சாய் விளக்கம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.