14/08/2018

வாழ்க்கை இரகசியம்...


பழையவற்றை நினைத்து வேதனைபடுவதும் , எதிர்காலத்தை நினைத்து பயப்படுவதும் வாழ்க்கை அல்ல...

இந்த நொடியை சந்தோசத்துடன் உணர்ந்து வாழ்வதே வாழ்க்கை...

இந்த நொடியை சந்தோசத்துடன் உணர்ந்து வாழ தெரிந்தவரே எதிர்காலத்தை படைக்கும் தகுதியானவர்..

உங்களை சுற்றி அளவற்ற அன்பு மற்றும் சந்தோசம் இருப்பதாக உணருங்கள்..

அவ்வாறு இல்லாவிட்டாலும் மனதார நம்பி உணருங்கள்.....

அவ்வாறு செய்தால் உங்களுக்கான வாழ்க்கையும், உங்கள் மனமும் உங்கள் கட்டுப்பாட்டில் வந்து நீங்கள் நினைப்பது எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அடைய முடியும்...

சந்தோசம் என்பது உங்கள் மனதில் இருந்து உருவாகிறது...

அன்பானவர்களுக்கு மனது கூட ஒரு புனிதமான தாயின் கருவறை தான்..

உங்களுக்கான சந்தோசத்தையும் படைக்கும், மற்றவர்களுக்கு அளவற்ற அன்பை அள்ளி தரும் மாபெரும் படைப்பாளி நீங்கள்.

நீங்கள் மாதம்தோறும் வெறும் டெலிபோன் பில், கிரெடிட் கார்ட் பில், பால் பில், மின்சார பில் கட்ட மட்டுமே இந்த பூமியில் பிறக்கவில்லை..

நீங்கள் சம்பாதிப்பதற்கு அல்லது சாதிப்பதற்கு மட்டுமே இந்த பூமியில் பிறக்கவில்லை..

மாறாக இந்த பூமியின் மதிப்பை கூட்டவே நீங்கள் பிறந்து இருக்கிறேர்கள் என்பதை உணருங்கள்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.