14/08/2018

நிலச்சரிவிலிருந்து தனது முதலாளியை காப்பாற்றிய நாய்...


இடுக்கி மாவட்டம் கஞ்சிகுழி கிராமத்தில் நிலச்சரிவு ஏற்படும் நேரத்தில், அதிகாலை 3 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த தனது முதலாளியை அவ்வீட்டு நாய் மிகவும் பலமாக குரைத்து எழுப்பியது. நாயின் சத்தத்தை கேட்டு வெளியே வந்த சிறிது நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு அவ்வீடு தரைமட்டமானது.

இதனால் அதிர்ஷ்டவசமாக நாயின் உரிமையாளர் மோகனன் மற்றும் அவரது மனைவி உயிர் தப்பினர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவரது தாத்தா மற்றும் பாட்டி உயிரிழந்தனர்.

நாயின் முன் எச்சரிக்கை நடவடிக்கையால் உயிர் தப்பிய அவர்கள் நாயின் செயலால் மனம் நெகிழ்ந்தனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.