14/08/2018

மழை வெள்ளத்தில் மூழ்கிய கேரளாவை காப்பாற்றும் காமராஜர் கட்டிய அணை.. நெகிழும் மக்கள்...


கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கேரளா முழுவதும் வெள்ளக்காடாக மாறி விட்டது. மழை வெள்ளத்திற்கு இதுவரை 40 பேர் வரை பலியாகி விட்டனர்.

இந்த மழை வெள்ளத்திற்கு கேரளாவே அலறி கொண்டு உள்ளது. ஆனால் இந்த வெள்ளத்தில் இருந்து கேரளாவின் பாலக்காடு மட்டும் வெள்ளத்தில் இருந்து தப்பி உள்ளது.

இவர்களை காப்பாற்றியது மழப்புலா அணைதான். இந்த அணையை தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் கேரளா தமிழகத்தோடு இருந்த போது 1955ம் ஆண்டு கட்டியதாகும்.

இந்த மலப்புழா அணைதான் பாலக்காட்டை காப்பாற்றி உள்ளது. இதனை பாலக்காடு மக்கள் இப்போது நினைத்து பெருமிதம் கொண்டு வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.