24/08/2018

நம்மிடையே வாழும் வேற்றுக்கிரக வாசிகள்...


“Ancient Aliens” என்னும் தொடரைக் ரொம்ப வருடங்கள் முன்னால் தரவிறக்கி பார்த்து இருக்கேன், இது மட்டும் இல்லாம ஏலியன்ஸ் பற்றி எனக்கு கொஞ்சம் ஆர்வம் அதிகம். வெளிநாடு போல இங்கு ஏலியன்ஸ் பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. ஏலியன்ஸ் watcher இங்கு நிறைய பேர் கிடையாது. “Ancient Aliens” இந்தியாவை பற்றி அதிகம் வரல ஒரே பார்ட் தான் அதுவும் மகாபாரதம் துவாரகை கிருஷ்ணன் அஸ்திரம் என்று கதையை முடித்து விடுகிறார்கள்.இது தவிர்த்து இந்தியாவில் சின்னங்கள் வைத்து ஆரய்ச்சிகள் செய்வது பெரும்பாலும் தங்க புதையல் நோக்கி தான் இருக்கிறது.இந்த ஏலியன்ஸ் விசியத்தில் நம்முடைய ஆராய்ச்சியாளர் பங்கு மிக மிகக்குறைவு என்று தான் சொல்ல வேண்டும்.


ஆங்கிலத்தில் உள்ளது போல தமிழில் ஏலியன்ஸ் பற்றி புத்தகம் மிக குறைவு என்றே சொல்லலாம், அப்படி இருக்குமானல் அது ஆங்கிலத்தில் இருந்து மொழி மற்றம் செய்யப்பட்டதாக தான் இருக்கிறது. தமிழில் இருக்கிறது என்று உங்களுக்கு தெரிந்தால் தயவு செய்து எனக்கு தெரியபடுத்தவும் படித்து தெரிந்து கொள்கிறேன்.


The chariots of God  நிறைய ஆதாரங்கள் இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளது.இதில் வருவது எல்லாம் உண்மை என்று எடுத்து கொள்வது தவிர்ப்பது உங்களோட முடிவை பொறுத்து.


உலகத்தில் ஏலியன்ஸ் என்று அறியப்பட்ட மிக முக்கியமான வகைகள் மூன்று அவை...

Greys
Reptilians 
Nordics.

பெரும்பாலும் க்ரேஸ் பற்றிதான் நிறைய தகவல்கள் உள்ளது. அவை தான் அதிகம் தென்படுகிறது என்றும் சொல்லபடுகிறது.தோல் வெளிறிய சாம்பல் நிறத்தில் இருப்பதால் இதற்க்கு பேர் greys மற்றும் இதன் தோல் சுருங்கி விரியும் தன்மை கொண்டதாகவும், பெரிய தலை, குமிழ் நெற்றி, முட்டை மாதிரியான கண்கள், மெல்லிய சவ்வுகளால் விரல்களை இணைக்கபெற்று கைகள் மற்றும் கால்களை உடையது. காதுகள் என்று தனியான அனடமி structure இல்லாமல் உருவம் பெற்றதாக.தொடர்புகொள்ள நுண்ணுணர்வு மற்றும் ஒலி அலையை பயன்படுதுகிறது.எப்படி வௌவால்கள் தனக்கான ஒலி அலைவரிசை வைத்து இருக்கிறதோ அது போல greysயும் தனி அலைவரிசையை பயன்படுத்தி மக்களின் மனதில் இருப்பதை அறியும் திறன் பெற்றது.


பெரும்பாலும் இந்தவகை ஏலியன்ஸ் தான் மக்களை, விலங்குகளை மற்றும் இதர உயிரினங்களை ஆய்வுக்காக கடத்திசெல்கிறது என்று சொல்கிறார்கள்.இது பெரும்பாலும் குளிர் மற்றும் பனிபடர்ந்த ஊர்களில் தான் அதிகம் தென்படுகிறது, வெப்பம் இதற்க்கு ஒத்துகொள்வதில்லை போலும்.

இதனால்தான் இந்த வகை ஏலியன்ஸ் இந்தியா போன்ற வெப்ப மண்டல இடத்தில் காணமுடிவதில்லை. இந்த greys வகை ஏலியன்ஸில் கொஞ்சம் hybrid வகைகளும் உண்டு.


அடுத்தது  Reptilians என்று கருதப்படும் ஊர்வன வகை ஏலியன்ஸ், இந்த இனம் பற்றி பல கோட்பாடுகள் உள்ளது சிலர் பண்டையகாலத்தில் இருந்தே இந்த இனம் பூமியில் வாழும் உயிரினங்களில் ஒன்று என்று சொல்கிறார்கள். பூமியில் இந்த வகை இனம் ரொம்ப காலத்திற்கு முன்பே விதைக்கபட்டதாக சொல்கிறார்கள். பண்டைய காலத்தில் இருந்த இந்த ஊர்வன இனம் என்று சொல்லும் இந்த வகை நாம் கோவில்களில் சிலைகளில் பார்க்கும் பறக்கும் நாகம், யாளி போன்றவற்றை சொல்லலாம், சீனாவின் டிராகன் மாதிரியான உயிரினம். இந்த இனம் மனித தோற்றத்திலும் இருக்கும் ஊர்வன என்றும் சொல்லலாம்.

6 முதல் 9 அடி உயரம். நீண்ட கைகள் மற்றும் கால்கள் பலம் மிகுந்த தசை, மற்றும் ஒவ்வொரு கையில் 3 நீண்ட விரல்கள், அவர்களின் தோல் பழுப்பு அல்லது கரும்பச்சை நிறத்திலான செதில்களானது. சில துணை வகைகளுக்கு வெளிப்படையான வால்கள் போன்றஅமைப்பும் இருந்து உள்ளது.கூம்பு போன்ற தலை, காதுகள் மூச்சு நாசி பகுதியில் பிளவுகளை காணலாம்.கண்கள் நாம் காணும் பல்லி மற்றும் பாம்புகள் போல இருக்குமாம். எலும்புகளால் செய்யப்பட்ட இறக்கைகள் போன்ற அமைப்பு. தலையில் சில நேரங்களில் முதுகெலும்பு நீண்டு கொம்புகள் போல இருந்து இருக்கிறது. இந்த வகை உடல் அமைப்பு நமதுபூமியில் காணும் ஊர்வன போலவே உள்ளதா தோன்றும். நாம் இன்று படிக்கும் பார்க்கும் இந்தியா, சீனா மற்றும் கிரேக்க பழங்கால டிராகன்கள் மற்றும் சிறகு கொண்ட பாம்பு, பல தலைகள் கொண்ட பாம்புகடவுளர்களின் அனடமிக்கு சரியாக பொருந்தும் என்று நினைக்கிறன்.


இன்றும் இந்தியாவில் நாம் வணக்கும் நாகம், சரபம் போன்றவைகள் இந்த the Reptilians என்று கருதப்படும் ஊர்வன வகை ஏலியன்ஸ் தான்.இவர்களுக்கு குளிர் அதிகம் ஒத்துகொள்வதில்லை வெப்பமண்டலம் தான் இவர்களது இலக்கு. உதாரணமாக இன்றும் பாம்பு புற்றில தான் வளர்கிறது. புற்றின் வெப்பம் புற சூழலையும் விட அதிகமாக தான் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.சீனாவின் பழங்கால கதைகளில் வரும் நான்கு டிராகன் இந்த the Reptilians வகை ஏலியன்ஸ் ஆகும், இவர்கள் உருமாறும் தன்மை கொண்டவர்கள் என்று குறிப்புக்கள் உள்ளது, இப்போ உங்களுக்கு ஒன்று ஞாபகம் வருமே அதே தான் ஸ்ரீப்ரிய இச்சாதாரி பாம்பாக நடித்த படம் பற்றி தான் சொல்கிறேன்,நாம் அவற்றை பாம்பு என்று சொல்லிட்டோம், சீனாவில் டிராகன் ராஜாக்கள் என்று வைத்து அவர்கள் ஒவ்வொரு திசைக்கும் அதிபதியாக இருந்து ஆட்சி செய்தார்கள் என்று சொல்கிறார்கள்.

அதன் பிறகும் டிராகன்கள் சினாவின் மிக முக்கிய அடையாளமா இன்று வரை உள்ளது. இறுதியாக கிரேக்க நாடு, ஏதன்ஸ் நாட்டை ஆண்ட முதல் மன்னனை பற்றி இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும், அவன் பெயர் சிஸ்ரோபஸ் ஆகும். இவனது உடல் ஆனது பாதி மனித அனடமி போலவும் மீதி பாம்பின் அனாடமி போலவும் இருந்ததாக குறிப்புக்கள் உள்ளது. Pergamum temple என்று சொல்லப்படும் கிரேக்க பழங்கால இடிப்படுகளில் மனித தலை கொண்ட பாம்பின் உடம்பு அமைப்பு போன்ற சிலைகள் மற்றும் கற்செதுக்கம் உள்ளதாம்.


இப்போ நம்ம இந்தியாவில் உள்ள கதைக்கு வருவோம் அவை ராகு கேது, மனிததலை கொண்டபாம்பின் உடம்பு, பாம்பின் தலையுடன் கூடிய மனித உருவம் இவரை இரண்டையும் நாம் கடவுளாக பார்க்கிறோம், இன்றும் பல கோவில்கள் இந்த ராகு கேதுவிற்கு உள்ளது. இவர்களையும் ஆராய்ச்சியிளார்கள் ஏலியன்ஸ் என்று தான் சொல்கிறார்கள். இந்த வகை ஏலியன்ஸின் வேலை மனிதனை அடிமைபடுத்தி அவனது மனதில் ஏற்படும் பயம் மற்றும் குழப்பத்தை மூலதனமாக வைத்து செயல்படுவதாக நம்பப்படுகிறது. இந்த வகை ஏலியன்ஸ் நம் மனித இனம் தவிர பிற உலகிலும் தன் ஆளுமையையும் அடக்குமுறையும் செலுத்தும் திறன் கொண்டவர்களாக உள்ளார்கள்.

பிரபஞ்சத்தில் ஏற்படும் குழப்பத்திற்கு மிக முக்கிய காரணியாக இருப்பவர்கள் இவர்கள் தான், இந்த வகை ஏலியன்ஸ்தன்மை மிக அதிகமான நெகடிவ் vibration கொண்டது, இந்த வகை ஏலியன்சால் பீடிக்கப்பட்டவர்களும் முழுவதும் நெகடிவ் vibration கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் மனித இனத்தில் கலபினம் செய்து அவர்கள் மூலமாக தாங்கள் செய்ய துடிக்கும் காரியங்களை முடிப்பார்கள், ஒரு கட்டத்தில் எல்லாரும் இவர்களது கலபினத்தில் வந்தவர்கள் ஆகி இந்த மொத்த உலகத்தையும் தன் வசம் கொண்டு சென்று விடுவார்கள், இந்த நெகடிவ் vibration ஏலியன்ஸ் இனம் மறைந்து வாழ்ந்து இவர்களால் அடிமைபடுத்தபட்ட மக்களின் நிழல்ளாக இருந்து தூர்காரியங்களை செய்வார்கள்.

ராகு கேதுவின் பண்பு என்ன என்று உங்க எல்லருக்கும் தெரியும், மேற்சொன்ன எல்லாமே ராகுகேது தோஷத்திற்கு பொருந்தும்.


அடுத்த இனம் The Nordics வகை ஏலியன்ஸ், இது மனிதன் போலவே இருக்கும், வித்தியாசமான் ரோம நிறங்கள், கருவிழி நிறங்களை கொண்டது.மனிதன் போலவே இருந்தாலும் இவர்களுக்கு நுண்ணறிவு அதிகம், இந்த வகை ஏலியன்சை hybridஆகா கருதுபவர்களும் உண்டு, இவைபெரும்பாலும் fringeல் வரும் observer போன்றவர்கள், மனிதனின் எல்லா நடவடிக்கைகளும் அவர்கள் கவனிப்பார்கள் மற்ற ஏலியன்ஸ்ல் இருந்து காப்பாற்றி நம்மை வழிநடத்துவார்கள் என்று சொல்லபடுகிறது. இந்த வகை ஏலியன்ஸ் அமைதி விரும்பிகள் ஆன்மிக விழிப்புணர்வு போன்றவற்றை மக்களிடையே பரவ செய்வது தான் நோக்கம்.இது தான் நமது உலகில் இன்று நாம் விடை தேடி ஒரு முடிவுக்கு வரமுடியாத ஏலியன்ஸ் பற்றிய செய்திகள், இதில் இருந்து நீங்கள் என்ன முடிவுக்கு வருகிறிர்கள் உண்மையில் ஏலியன்ஸ் உள்ளன?
இல்லை கட்டுகதையா___________?

தொடர் ஆய்வில் வேதவசனங்களில் வேற்றுகிரகவாசிகள்…

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.