24/08/2018

ஆவிகளும் உண்மைகளும்...


ஆவிகள் சூரியனை நோக்கிச் சென்றால் சொர்க்கம்...

சந்திரனை நோக்கிச் சென்றால் வைகுண்டம்..

இங்கு செல்லும் ஆவிகள் மறுபிறவி பிறக்கும்..

சனிக்கிரகத்தை நோக்கிச் சென்றால் நரகம்..

பல ஆண்டுகள் கடும் வேதனையை அனுபவிக்க வேண்டும்.

இதுபற்றிய முழுவிபரம் கருட புராணத்தில் இருக்கின்றது.

திடீர் விபத்து, தற்கொலை, போர்/கலகம்/கொலை/எதிர்பாராத மரணம் இவற்றால் இறப்பவர்கள் முறைப்படி இறக்கும் காலம் வரை ,எங்கே இறந்தார்களோ, அங்கேயே ஆவியாக இருக்க வேண்டும்.

இறந்தது ஆண் எனில் அதற்கு பேய் என்றும், பெண் எனில் பிசாசு என்றும் பெயர்.

நம் சூட்சும உடல் ஸ்தூல உடலான ஐம்பூத உடலில் இருந்து பலவந்தமாக பிரிக்கப்படுவதால் இறந்தவரின் ஆவி எந்த இடத்தில் மரணமடைந்ததோ அங்கேயே சுற்றும்.

சுமார் 20 அடி சுற்றளவுக்குள் சுற்றும். வெளியே எங்கும் செல்ல முடியாது. உயரேயும் பறக்க முடியாது.

இதைத்தான் மந்திரவாதிகள் பிடித்து தங்களிஷ்டப்படி ஏவல் செய்கின்றனர்.

அருளாளர்களின் ஆசி கிடைத்தால் இந்த ஆவிகளுக்கு விடுதலை.

துர்மரணம் அடைந்தவர்களின் பெயரை குழந்தைகளுக்கு வைக்கக்கூடாது. அவர்களை வணங்கக்கூடாது. அவர்களுக்கு படையல் போடக்கூடாது.

உச்சாடன கணபதி ஹோமம் மற்றும் பிதுர் ஹோமம் மூலம் அவைகளை வேறிடத்திற்குப் போகச் செய்யலாம்.

துர்மரணமடைந்தது வாலிப வயதுப் பையனாக இருந்தால் வாலிப வயதுப் பெண்ணைத் துன்புறுத்தும். வாலிப வயது பெண்ணாக இருந்தால் வாலிப வயதுப் பையனைத் துன்புறுத்தும்.

ட்யூப்லைட் வெளிச்சத்தில் துர் ஆவிகள் செயல்பட முடியாது. ஏன் எனில் அதில் பாதரசம் உள்ளது.

ஹாஸ்டல்கள், அரண்மனைகள், ஆஸ்பத்திரிகள், சில வீடுகளில் இப்படிப்பட்ட ஆவிகள் இருக்கும்.

மாந்திரீகத் தொழில் தெரிந்தவர்கள் மூலமாக பச்சைப் பானைகளில் அடைத்து இவற்றை ஆற்றங்கரை, குளக்கரை, கடற்கரை, வனங்களில் விட்டால் அந்த ஆவிகளுக்கும் விடுதலை.

நமக்கு பெரும் புண்ணியம் தரும் செயலாகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.