07/08/2018

உயிர்த்தெழுதல் பார்வை மூன்று...


இறைவேதம் என்றால் அதில் முரண்பாடுகளுக்கு இடம் இருக்கக்கூடாது விவிலியத்தில் ஓரிரு இடங்களில் உண்மை வெளிச்சம் அடித்தாலும் முழுவதுமாக பொய் இருள் சூழ்ந்துள்ளதை நாம் அறிவோம்.

ஒரு மனிதரின் அர்த்தமற்ற பிதற்றல்களில் உருவான சாம்ராஜ்யம் தான் கிறித்துவம்.

இயேசு வாழும் போது கிறித்துவம் என்ற மதமே இல்லை.அவர் ஒருபோதும் கிறித்துவத்தை போதித்ததே கிடையாது.இன்னும் சொல்ல வேண்டுமென்றால் நாம் அவருக்கு சூட்டிய பெயரான இயேசு என்றப் பெயரும் அவருக்கே தெரியாது...

அவர் மஸீயாவாகத் தான் இஸ்ரவேலர்களுக்கு அனுப்பப்பட்டாரேத் தவிர உலக சமுதாயத்திற்கு அல்ல...

சரி,இப்பொழுது கடந்தப் பதிவில் இயேசுவின் மரணத்தை குறித்த சர்ச்சைகள் அவரின் சீடர்கள் எனக் கூறிக்கொள்ளும் நபர்களால் உருவாக்கப்பட்டது.அதனை ஓரம் தள்ளிவிட்டு இயேசுவின் உண்மையான சீடர் என்றழைக்கப்படும் பர்ணபாஸின் சுவிசேஷத்திலிருந்து சில பத்திகள்...

இயேசு இருந்த இடத்தை நோக்கி காவல் வீரா்களும்,யூதாசும் வந்த பொழுது அதனை உணர்ந்த இயேசு வீட்டினுள் நுழைந்தார் அங்கு பதினொரு சீடர்கள் உறங்கிக்கொண்டிருந்தனர்..

இறைவன் தனது ஊழியக்காரரான இயேசுவுக்கு வரப்போகும் ஆபத்தை உணர்த்தி கபரியேல்,மிக்கேல்,ரப்பேல் மற்றும் உரியேல் ஆகிய வானவர்களை கொண்டு அவரை வானளவு உயர்த்திக்கொண்டார்.
(பர்ணபாஸ்−215)

இயேசு வானளவு உயர்த்தப்பட்டது அறியாத யூதாஸ் முந்திஅடித்துக் கொண்டு அறையினுள் நுழைந்தான். அப்பொழுது அற்புதரான இறைவன் அற்புதமாய் செயல்பட்டார்.யூதாஸின் முகத்திலும் குரலிலும் இயேசுவை ஒத்திருக்கச் செய்தார்.சீடர்கள் அனைவரும் யூதாஸை இயேசு என்றே கருதினோம்...

அவன் எங்களை எழுப்பி போதகர் எங்கே என்றான்.நாங்களோ நீங்கள் தான் எங்கள் ஆசிரியன்.எங்களை நீங்கள் மறந்தீரோ?என்றோம்...

அக்கணம் அவன் நான் யூதாஸ் உங்களுக்கென்ன புத்தி கெட்டுவிட்டதா என்று கேட்கும் தருணத்தில் காவல் வீரா்கள் அவனை சுற்றி வளைத்தனர்...

படைவீரா்கள் யூதாஸைச் சுற்றி வளைத்துக் கொண்டு ஏளனம் செய்தனர். அவனோ நான் இயேசு இல்லை யூதாசு என்று சொல்லிக் கொண்டே இருந்தான்.அவனுடைய பிதற்றல்களை கேட்டு கேட்டு சலிப்புத் தட்டிய படைவீரா்கள் யூதாஸை அடிக்கவும் உதைக்கவும் செய்து எருசலேமுக்குக் கொண்டுச் சென்றனர்.யோவானும் பேதுரும் அவர்களை இரகசியமாகப் பின்பற்றினர்...

தலைமைக் குரு யூதாஸிடம் விசாரித்த பின்பு,பரிசேயர்கள் சங்கம் கூடி அவருக்கு மரணத் தண்டனை அளிக்கத் தீரமானித்தார்கள்.யூதாசை இயேசுவேன எண்ணியதால் மரணத்திற்கு பயந்து யூதாஸ் கெஞ்சியபோது மக்கள் சிரிப்பால் நகைத்தனர்...

பிலாத்து இயேசு உருவத்தில் இருக்கும் யூதாஸை விசாரித்தார்.யூதாஸ் கூறும் சங்கதிகளை உணர்ந்தார்.அந்த இயேசு மிகப்பெரிய மாயவித்தன் அவர் மந்திர சக்தியின் மூலம் என்னை அவருடைய சாயத்தில் மாற்றிவிட்டார் என்றான்...

பின்பு,இம்மனிதர் உண்மையைத் தான் சொல்கிறார் அந்த இயேசு ஒரு மாயவித்தன் இவரை இங்கே மாட்டி விட்டுள்ளார் என்றார் பிலாத்து.அவரின் பேச்சைக் கேட்ட சதுசேயர்களும் பரிசேயர்களும் அவர் நம்மிடம் இருந்து தப்பிக்க நாடகமாடுகிறார் என்று பிலாத்துவின் பேச்சை ஓரம் தள்ளிவிட்டு காவல் வீரா்களிடம் யூதாஸை ஒப்படைத்தனர்...

கல்வாரி மலைக்குக் கொண்டுசென்று யூதாஸை சிலுவையில் நிர்வாணமாக அறைந்தனர்.

அழுகையைத் தவிர வெறோன்றும் அவர் செய்யவில்லை.சிலுவையில் மரணிக்கும் போது."இறைவா.. என்னை ஏன் கைவிட்டீர்.உண்மையானவர் தப்பி விட்டார்.நான் நியாயமற்ற முறையில் மரிப்பதேன்" என்றார்.

உண்மையாகவே நான்(பர்ணபாஸ்) உங்களிடம் சொல்கிறேன் யூதாஸின் குரல்,உருவம்,முகம் அனைத்தும் இயேசுவைப் போன்றே இருந்தது. சீடர்களும் அவரது தாயான கன்னிமரியாளும் மரித்தது இயேசுதான் என்று நம்பினர். சிலர் இயேசு போலிஇறைவாக்கினர் அவர் செய்த அற்புதங்கள் மாயமந்திரம் என நினைத்து அவர் போதித்த தத்துவங்களிலிருந்து நீங்கி சென்றனர்...

இந்த உலகம் முடிவுக்கு நெருங்கும் வேளை வரை அவர் சாகமாட்டார். அதற்காகவே அவர் இவ்வுலகிலிருந்து எடுத்துக் கொள்ளப்படுவார் என்று இயேசு சொன்னது மறந்ததேயாகும்...

மேலும் இயேசுவின் பிரதான சீடர்கள் 12 பேர்.இந்த 12 சீடர்கள்தான் அப்போஸ்தலர்கள் என அழைக்கப்படுகிறார்கள்...

இவர்களை தவிர இயேசுவுக்கு இன்னும் 72 சீடர்கள் உண்டு.இந்த வட்டத்தைத் தாண்டியும் இயேசுவின் மீது மிகுந்த விசுவாசம் கொண்ட நம்பிக்கையாளர்கள் உண்டு.அவர்களில் சிலர் யூதாசின் உடலை இயேசுவென நினைத்து அங்கிருந்து எவருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக அப்புறப்படுத்திவிட்டு இயேசு உயிர்த்து வானுலகிற்குச் சென்று விட்டதாக செய்தி பரப்பினர்...
(பர்ணபாஸ்−218)

யூதாஸின் மரித்த உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு எப்பொழுது காவலர்கள் காவல் காத்தார்கள் என்றால் யூதாஸின் உடலை திருடிச் சென்றபிறகே காவல் காத்தார்கள். யூதாஸின் உடலை திருடிச் சென்றுவிடுவதாகச் செய்தி யூத குருக்களுக்கு எட்டியது.இதனால் தலைமைக் குருக்களும்,பிரசேயர்களும் பிலாத்துவை,சந்தித்து,

"அவருடைய சீடர்கள் ஒரு வேளை வந்து அவன் உடலைத் திருடிச் சென்று விட்டு, இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார் என்று சொல்ல நேரிடும்"என்றனர்...
(மத்தேயு−27:64)

மேலிருக்கும் செய்தியிலிந்து தெளிவாகிறது இறைவனுக்கு பயப்படாத சில சீடர்களால் தான் யூதாஸின் உடல் திருடி மறைக்கப்பட்டு இயேசு உயிருடன் எழுப்பப்பட்டார் என்ற குழுப்பம் உதயமானது என்று...

என் அன்பிற்கினிய கிறித்துவ சகோதர்களே சிந்தியுங்கள் நீங்கள் வருடாவருடம் கொண்டாடும் உயிர்த்தெழுதல் தினம் யாருக்காக கொண்டாடுகிறீர்கள் நீங்கள் நினைக்கலாம் உயிர்த்தெழுந்த இயேசுவுக்கு என்று ஆனால் உண்மையில் நீங்கள் யூதாஸைத் தான் கும்பிட்டுவருகிறீர்கள்.எவ்வளவு பெரிய அபத்தம்..

வானளவில் உயர்த்தப்பட்ட இயேசு இறைவனின் அனுமதியைக் கொண்டு மீண்டும் தன் தாயையும் தன் சீடர்களையும் காண வந்துள்ளார் என்று பர்ணபாஸ் சுவிசேஷம் நமக்கு உணர்த்துகிறது...
(பர்ணபாஸ்−219)

மேலும் பர்ணபாஸின் சுவிசேஷத்தில் பர்ணபாஸ் மட்டும் தான் மரியாளை கன்னிமரியாள் என்று குறிப்பிடுகின்றார். வேறு எந்த சுவிசேஷமும் கன்னிமரியாள் என்று பதிவு செய்யவில்லை என்று குறிப்பிடத்தக்கது...

மேலும் பர்ணபாஸ் மட்டும் தான்  இயேசுவிடம் நேரடியாக சுவிசேஷம் எழுத அனுமதி வாங்கியுள்ளார்.
(பர்ணபாஸ்−221)

இயேசுவை யாராலும் கொல்ல இயலாது என்று தாவீது அரசரின் கனவு நமக்கு பரிசாற்றுகிறது. (சங்கீதம்−16:9)

இந்த வரலாற்றைத் தான் ஆயிரத்து நானூறு வருடங்களாக குர்ஆன் நமக்கு தெள்ளத்தெளிவாக விளக்குகிறது...

இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்; மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.
(அல்குர்ஆன் : 4:157)

“ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்; பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது;  (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்” என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக) (அல்குர்ஆன் : 3:55)

இவ்விரண்டு வசனங்களை தவிர்த்து ஈஸா(அலை)அவர்களை குறித்து குர்ஆன் நிறைய பேசிகிறது அன்பர்களே..

நம்மை படைத்த இறைவனுக்கு குழந்தை குட்டிகள் நம்மைப் போன்றே இருக்கும் என எண்ணியது மடமையிலும் மடமை.

ஆகவே தெளிவான சான்றான  குர்ஆன் உங்களிடம் உள்ளது அதனைக் கொண்டு நேர்வழிப் பெற அன்போடு இஸ்லாத்தின் பக்கம் அழைத்தவனாக...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.